திங்கள், 11 ஜூன், 2012

::: நடிகர்களின் நிஜ முகங்கள் ::: PART 4

பகுதி 4:‍-

யாரென்று கண்டுபிடித்தீர்களா ? கலையுலக பொட்டின் வாரிசு அவர்.அந்த நேரத்தில் அவர் ஒன்றும் பெரிய ஹீரோவெல்லாம் கிடையாது. சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து வந்தார்.இன்னும் க்ளூ வேண்டுமா?.இப்போது விளம்பரங்களில் நடித்து வருகிறார்.அப்பன் சேர்த்த காசை தின்று தின்றே அழித்த குடும்பம் அது..
அவர் அப்போது மிசுபிஷி லேன்சர் கார் வைத்திருந்தார்.எதற்கு அந்த "ஹாரன்" சத்தம் என்றால் அய்யா!!!??? வரும்போது ஒடிப்போய் கேட்டை திறக்க வேண்டுமாம்.இல்லாவிட்டால் அன்று நான் பார்த்த காட்சிதான். அவர் அன்று அந்த
வாட்ச்மேனைப்பார்த்து....
"ஏண்டா வேலைக்கார நாயே..என்ன .....டுங்க போன.... என எழுத முடியாத வார்த்தைகளால் அர்ச்சித்தார்..எனக்கு மன வேதனை, என்னடா இது நம்மால் தானே இவ்வாறு ஆயிற்று என்று..

ஒரு புறம் தாங்க முடியாத ஆத்திரமும் கோபமும்..

பணக்கார திமிரும்,புகழின்ஆணவமும் அவர் தலையில் குடிகொண்டிருப்பதை நான் கண்ணால் பார்த்தேன்.வெளியில் எவ்வளவு அழகாக பேசும் அவர்களின் உண்மை சொரூபத்தை நான் நேரில் கண்டேன்.

எனக்கு இன்று கூட "அவர்" என்று எழுத தோனவில்லை "அவன்" என்றே எழுத தோணுகிறது.

அன்றைய மாலைப்பொழுதில்,ஒவ்வொரு காராக வந்து நின்றது.அப்போதைய‌ சங்க தலைவரும்,(இப்போது கட்சி தலைவர்) ஒரு காரில் வந்தார்,தமிழில் புரட்சியான நடிகரும் வந்தார்.சமீபத்தில் இறந்த அந்த 'விலங்கு" நடிகரும் வந்தார்.பிறகு முத்தான‌ நடிகரின் வாரிசு நடிகரும் வந்து சேர்ந்தார்.

அப்போது எல்லாரும் "டாடா சஃபாரி" கார்தான் அதிகமாக வைத்திருந்த‌னர்.அதில் ஏ.சி யை போட்டு ஒரு காரில் முத்தான நடிகரின் வாரிசான "அலைகள்" நடிகரும் மற்றொரு காரில் "விலங்கு நடிகரும் உட்கார்ந்திருந்தனர்.

விலங்கு நடிகர் படத்தில் வருவதுபோன்ற மெலிதான எவர்சில்வர் உறை போட்ட அந்த வெளிநாட்டு மருந்து புட்டியை திறந்து குடித்துக்கொண்டே இருந்தார் மேலும் ஒரு புறம் கையில் சிகிரெட் வேறு...

அவரிடம் சற்றே பேச்சை கொடுக்க அவர் என்னைப்பற்றி கேட்டுவிட்டு,பேச ஆரம்பித்தார்..சிறிது நேரத்தில் திடீரென அவ‌ருக்கு போன் வர யாரிடத்திலோ கன்னடத்தில் பேசிக்கொண்டிருந்தார்.நான் பெங்கலூரூவில் வேலை செய்து கொண்டிருந்த போது,ஒரளவு கன்னடம் பேச பழகியிருந்ததால்,அவரிடம் கன்னடத்தில் பேச முயற்சிக்க சற்று வித்தியாசமாக உற்று நோக்கிய அவர்,பின் பேச்சை தொடர்ந்தார்...

அவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே, முன்னால் வந்த சில நடிகர்களை
அந்த பொட்டின் வாரிசு ஒன்று கூட்டிநுழைவு வாயில் அருகில் பக்கவாட்டில் அமைந்துள்ள அந்த கட்டிடத்தின் முதல் மாடிக்கு அனைவரையும் அழைத்துச்சென்றார்..
.
இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க ,அலைகள் நடிகரால் ஒரு நிமிடம் கூட ஏ.சி இல்லாமல் இருக்க முடியவில்லை.காரில் இருந்து வெளியே வருகிறார் இரண்டு நிமிடம் இருக்கிறார்,வேர்த்துக்கொட்டுகிறது,கைகள்,கழுத்து,உதடு எல்லம் சற்றே நிறம் மாறி இருக்க, கைகள் வேறு நடுக்கின்றது.அனைவரின் பார்வையும் அவர் மேல் இருக்க, பொட்டின் வாரிசு அவரையும் முதல் மாடிக்கு கூட்டிச்சென்றார்.

தொடரும்..

4 கருத்துகள்:

  1. பல பேரோட முகத்திரையை கிழிக்காம விடமாட்டே போல...ம்ம்ம்ம்..நடத்து..நடத்து..

    பதிலளிநீக்கு
  2. அந்த கலையுலக பொட்டின் வாரிசு யார் என்பதை யூகிக்க முடியவில்லை. இன்னும் கொஞ்சம் க்லு கொடுங்க ப்ளீஸ்.

    பதிலளிநீக்கு

::: வணக்கம் :::

உங்கள் வருகைக்கு நன்றி !!!

ஊங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வரவேற்கின்றேன்.

அன்புடன்

ஆரூரான்