ஞாயிறு, 25 மார்ச், 2012

::: தமிழர்களும் ஆங்கில தொ(ல்)லைக்காட்சிகளும்:::

CNN-IBN

இந்தியாவில் ஏராளமான செய்மதி தொலைக்காட்சிகள்  பெருகி விட்டன..அவற்றில் சில மட்டுமே நடுநிலையை கடை பிடிக்கின்றன ...

ஒவ்வொருமுறை   தமிழர் சம்பந்தமான பிரச்சனை வரும்பொழுதும் தொடர்ந்து தமிழருக்கு எதிரான போக்கையே கடைபிடிக்கின்றன ..

முல்லை பெரியாராக இருக்கட்டும் அல்லது காவிரி பிரச்சனையாக இருக்கட்டும் ,நமக்கு ஆதரவாக குரல் கொடுக்க எந்த ஆங்கில ஊடகமும் இல்லை.

தமிழ் என்று பேசினால் "ப்ரோ tamils " என்று கூறுவார்கள் . எந்த ஆங்கில செய்தி ஆசிரியரும் தமிழைப்பற்றியும் ,தமிழர் வரலாறு பற்றியும் ஒன்றும் தெரியாதவராக இருப்பார் .

என்னை மிகவும் பாதித்தது ,இலங்கையில் உச்சகட்ட போரின்போது ,இந்திய அரசின் ஊதுகோலாகவே ஆங்கில ஊடகங்கள் செய்தி (அதாங்க  சிங்கள அரசுக்கு ஆதரவாக)ஒளிபரப்பின ...

போர் முடிந்த பிறகு சென்னையில் இவர்கள் பேட்டியெடுத்தது யாரிடம் தெரியுமா ???வெளி மாநிலத்திலிருந்து இங்கு வந்து தங்கியிருப்பவர்களிடம் ...

அவர்களுக்கு தமிழைப்பற்றியும் ,தமிழர் வரலாறு பற்றியும் என்ன தெரியும் ...

பெரிய கொடுமை ..வெட்ககேடு...???   பேட்டிஎடுத்ததும் தமிழன் இல்லை ...


4 கருத்துகள்:

::: வணக்கம் :::

உங்கள் வருகைக்கு நன்றி !!!

ஊங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வரவேற்கின்றேன்.

அன்புடன்

ஆரூரான்