திங்கள், 23 ஜூலை, 2012

:::நடிகர்களின் நிஜமுகங்கள்::: PART 8

பகுதி 8:-

நாம் அடுத்ததாக பார்க்கப்போவது யாரைப்பற்றி தெரியுமா?...

அடுத்ததாக நான்இருவரைப்பற்றி எழுதபோகிறேன்.அதில் ஒருவர் சினிமாத்துறைக்கு சம்பந்தமில்லாத நபர் வெளிநாட்டில் கலைநிகழ்ச்சிக்கு நடிகர்,நடிகைகள் எல்லாரும் போகும்போது,சினிமாத்துறைக்கு சம்பந்தமே இல்லாமல் ஒரு நபர் சென்று வருவார்.மற்றொருவர்…விவரம் கீழே…என்னங்க இது நடிகர்களின் நிஜ முகங்கள்ன்னு பேர் வச்சிட்டு வேற யாரையோப்பற்றி எழுதப்போறீங்க என்று கேட்பது புரிகிறது...

ஆனா இது போன்ற நபர்களை நீங்களும் தெரிஞ்சிக்கனுமே அதுக்குதான்.

நான் குறிப்பிடும் இவர் ஒரு பல முகங்களை கொண்டவர்.இவர் பேர் இனிஷியலே ரொம்ப குளிர்ச்சியாகத்தான் இருக்கும்.பகுதி நேர அரசியல்வாதி.அதாங்கதேர்தல் வரும்போது கட்சி கூட்டம் நடத்துவார்.அடுத்த கூட்டம் அடுத்த தேர்தலுக்குதான்.சொந்தமா ஹோட்டல்,அப்புறம் மெடிக்கல் காலேஜ் எல்லாம் இருக்கு..கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி இவங்க காலேஜ கூட அம்மா ஆட்சியில இடிச்சிட்டாங்க..இப்போ யாருன்னு தெரிஞ்சிருக்கும்...

அப்போது அவர்களுக்கு நார்த் ஃபோக் சாலையில் ஒரு அலுவலகம் இருந்தது.அங்குதான் அவரை சந்திக்க சென்றேன்.அப்போது அவ‌ரிடம் உங்களுக்கு எப்படி சார் சினிமா உலகத்துடன் தொடர்பு என்றேன்? அவர் சிரித்துக்கொண்டே.நமக்கு ரொம்ப நாளாக இவங்களோட தொடர்பிருக்கு,ஃபாரின் போகும்போதெல்லாம் நம்மள கூப்பிட்டு விடுவாங்க என்ற அவர் பதில் எனக்கு திருப்தியளிக்காத்தால் யார் சார் கூப்பிட்டு விடுவாங்க என நான் கேள்வியாக கேட்க...அவர் என் கேள்விக்கு சாமார்த்தியமாக சிரிப்பையே பதிலாக தந்தார்.ஆனால் என்ன "கலைச்சேவை" செய்ய போகிறார் என்று சினிமா வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு நன்றாக தெரியும்..

அடுத்து நான் சந்தித்தது இன்று மிகப்பெரும் அரசியல் தலைவராக இருக்கிற மாலுமி நடிகர்.நான் அவரை முத‌லில் சந்தித்தது நடிகர் சங்கத்தில்தான்.அப்போது உடல் எடை கம்மியாக நன்றாக இருந்தார் கட்சி ஆரம்பிப்பதைப்பற்றி ஊடகங்கள் பரபரப்பான செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருந்தன.அவரைச்சுற்றி எப்போது நான்கைந்து பேர் என கம்பீரமாக ஆனால் எளிமையாக இருந்தார்.உட்காருங்க சார் என்றார்.ஒரு பொறுப்பான தலைவருக்குரிய அனைத்து தகுதிகளுமே அவரிடமிருந்ததை என்னால் உணர முடிந்தது.நிறைய நேரம் பேசினோம்.

அவருடைய நண்பருடன் அவர் சேர்ந்து நடத்திய ஃபிலிம் புரொடக்சன் அலுவலகம் 100 அடி சாலையில் இயங்கி வந்தது.அப்போது அது உதவி இயக்குனர்களின் கூடாரம் என்றே சொல்லலாம்.நிறைய பேருக்கு உதவி செய்வதை நான் கண்ணால் கண்டிருக்கிறேன்.அது மட்டுமல்லாது,நடிகர் சங்கத்தின் கடனை அடைத்து,அதன் மதிப்பையும் உயரச்செய்தவர்.அவ‌ருக்கு அப்போது மது பழக்கம் இருந்தது ஆனால் அவர் அதற்கு அடிமையில்லை. ஆனால் இன்று அவருக்கு இருக்கும் மது பழக்கம் எப்படி அவரை ஆட்கொண்டது என எனக்கு புரியாத புதிராக இருக்கிறது.

பழகிய நாட்களில் நன்றாகவே பழகினார்.மேலும் அனைவரிடமும் மரியாதையாகவே நடந்து கொண்டார்.என்னுடைய பிசினஸ் பற்றி பேச,நான் தான் ஏற்பாடு பண்றேன் அதனால எங்க ஆளுங்க பார்த்துப்பாங்க என்றார்.நிகழ்ச்சியில் யார் யாரை கலந்துகொள்ள அனுமதிப்பது என்ற முடிவை எடுக்க அவ்ருக்கே அதிகாரம் வழ்ங்கப்பட்டிருந்தது.அவ்வாறு கலந்து கொள்பவர்களுக்கு அவர்களின் மார்க்கெட்டுக்கு தகுந்த மாதிரி சகுமானம் இந்திய ரூபாயில் சங்கத்திலேயே வைத்து கொடுக்கப்பட்டது.

அவ்வாறு தேர்ந்தெடுக்கும் போது அருகில் இருந்து கவனிக்கும் வாய்ப்பு கிடைத்தது.அதில் மிக அக்கறையாக ,வருமானம் இல்லாமல் கஷ்டப்படும் நடிகர்களை அதிகம் தேர்ந்தெடுத்தார்.அவரின் அந்த குணம் என்னை இன்று வரை என்னால் மறக்க இயலவில்லை.என்ன காரணத்தினாலோ அவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார். அது மட்டுமில்லை என்றால் அவருக்கு தலைமை தாங்கும் தகுதி இருப்பதை யாரும் மறுக்க இயலாது...

தொடரும்... 




வியாழன், 5 ஜூலை, 2012

::: நடிகர்களின் நிஜமுகங்கள் ::: PART 7



பகுதி 7:‍ -

வேலைப்பளுவின் காரணமாக சற்றே இடைவெளி...


"கோபால்" அக்காவிடம் அதாங்க அந்த மயிலாட மேடத்திடம் அவர் தோழிகள் எவ்வளவு எடுத்து செல்கிறார்கள் என்பதை ஒன்று விடாமல் கூற நான் அவனைப்பார்த்து முறைத்தேன்.அதை கண்டுகொள்ளாத அவன் காரியத்தில் கண்ணாயிருந்தான்.பயிற்சி முடிந்து அனைவரும் வெளியேற எங்களிடம் மனம் விட்டு பேசினார் அவர்.ஏழ்மையான குடும்பத்தில் ஏழு பெண்களில் ஒருவராக பிறந்து சினேகமான நடிகையின் தம்பியை மணந்து,பிறகு மணமுறிவு ஏற்பட்டு,தற்போது இரண்டாவது கணவருடன் வசித்து வருகிறார் மிக சிறிய வயதில் இண்டஸ்ட்ரியில் நுழைந்த அவர்,ஒரு பிரபலமான நடனக்கலைஞரிடம் உத‌வியாளராக சேர்ந்தார்.அந்த மேடம் இண்டஸ்ட்ரியில் சிறு வயதில் நுழையும்போது தான் பட்ட கஷ்டத்தையெல்லாம் விலாவாரியாக கூறினார்...

நன்றி சொல்லி அங்கிருந்து புறப்பட்டோம்.கோபாலிடம் தான் வெளிநாடு சென்று வந்தவுடன் அழைப்பதாக கூறினார்.அதைப்போலவெ திரும்பி வரும்போது அவனுக்கு ஒரு சென்ட் வாங்கி வந்து அன்பளிப்பாக கொடுத்தார்.ஆனால் சும்மா சொல்லக்ககூடாது அந்த‌ அளவுக்கு அவன் நட்பு வளர்த்திருந்தான்..

அடுத்து நான் பார்க்க சென்றது...அடுக்கு மொழியில் வசனம் பேசும் அந்த இயக்குனர் கம் நடிகரின் மகனை...யாரென்று தெரிகிறதா?அந்த நம்பர் நடிகையின் முதல்!? காதலர்.(நம்பர் கூடிக்கொண்டே போவதால் சீனியாரிட்டி பிரகாரம் சொன்னேங்க).தி.நகரில் உள்ள அவரது இல்லத்தின் வர‌ந்தாவில் அவரது தந்தையின் வெள்ளிவிழா படங்களின் ஷீல்டுகள் ஆக்கிரமித்து இருந்தது.அந்த நடிகரின் தாயார்தான் குடும்பம்,அலுவலகம் என அனைத்தையும் கவனித்துக்கொள்கிறார்.அவரின் பள்ளி தோழிதான் அவருக்கு உதவியாளர்.என்னிடம் ஃபோனில் பேசியது நடிகரின் தாயார்தான்.என்னுடைய சொந்த ஊருக்கு அருகில்தான் நடிகரின் தந்தையாரின் ஊர் என்பதால்,அவர்களைப்பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் என்னில் மிகுந்திருந்தது.

சிறிது நேரத்தில் சூடான ஃபில்டர் காஃபி வந்தது.அந்த அலுவலக உதவியாளரிடம் பேசிக்கொண்டே இருக்கும்போது அந்த நடிகர் வந்தார்.1984ம் ஆண்டு பிறந்த அவருக்கு வயது,அனுபவம் எல்லாம் குறைவு.ஆனால் சினிமாவில் மிகுந்த ஆர்வம்.அவரது தந்தை குறைந்த வயதிலேயே அவருக்கு நிறைய விடயங்களை பயிற்றுவித்திருந்தார்.கார் ஓட்டுவதிலும் ஆர்வம் அதிகம் உள்ள அந்த நடிகர்,அப்போது இரண்டு கார்களை வைத்திருந்தார்.ஆனால் வீட்டில் மிகுந்த கட்டுப்பாடு.சில விடயங்கள் எனக்கு ஆச்ச‌ர்யத்தை த‌ந்தது.

அவரது வீட்டில் நிறைய வேலயாட்கள்,உத‌வியாளர்கள் என எப்போதுமே கூட்டம். அந்த சம‌யத்தில் ஒன்றிரண்டு படமே நடித்திருந்தார்.வெளியில் கிளம்பிக்கொண்டிருந்த அவரை அவரது அம்மாவின் பள்ளி தோழியான அந்த அலுவலக உதவியாளர் அறிமுகப்படுத்தி வைத்தார்.அவருடனான எனது வேலைகளை முடித்துக்கொண்ட நான்,அவரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன்.அப்போது வெளியில் செல்லும் அவ‌ருக்கு,ஐந்தாறு நூறு ரூபாய்கள் கொடுக்கப்பட்டது..அதை வாங்கிகொண்ட அவர்,என்னிடம் இந்த பாருங்க சார் இதே மாதிரி பன்றாங்க,சின்ன பிள்ளைக்கு பணம் கொடுப்பது போல கொடுக்கிறாங்க.இத வச்சிகிட்டு என்ன பண்றது.எனக்கு ஒரு கிரிடிட் கார்டு வாங்கி கொடுங்க என்று சொன்னார்.அப்படியே எனது நட்பை தக்க வைத்துக்கொண்டேன்..

பொதுவாக சினிமாத்துறையினர் சென்டிமென்டுக்கு பெயர் போனவர்கள். இவர்களும் அப்படித்தான்.நான் ஃபாரக்ஸ் கொடுத்த வருடம் நடிகருக்கு நிறைய படங்கள் புக் ஆகி சூட்டிங்கிற்காக வெளிநாடு தொடர்ந்து செல்ல அவரது தாயாருக்கு மிக்க மகிழ்ச்சி.அதனால் நான் அந்த நிறுவன‌த்தில் வேலை செய்கின்ற வரையில் என்னை மட்டுமே வரச்சொலுவார் அவரது தாயார்.

நான் பார்த்த வரையில் அந்த நடிகர் மீடியாக்கள் சொல்வது போல பெரிய ஃபிளே பாய் எல்லாம் கிடையாது.எல்லாரையும் போல் இளம் வயதிற்கான‌ ஈர்ப்பு அவருக்கும் இருந்திருக்கலாம்.காதல் திருமணம் செய்துகொண்ட இவரது பெற்றோர்,நம்பர் நடிகையுடன் இவருக்கு இருந்த காதலை ஒரளவு ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்.ஆனால் காதலர் இருவரிடமும் பிரச்சனை வரக்காரணமான‌வர் உச்சத்தில் இருந்த‌ இருக்கின்ற அந்த சூப்பர் நடிகர்.

அதற்கு காரணம் அவ‌ரின் மகள்.அவருக்கு மன உளச்சலை அதிகம் ஏற்படுத்திய,ஏற்படுத்திக்கொண்டிருக்கும் அவர் மகளிடம் முதலில் மாட்டியதுஇந்த நடிகர்தான் ஆனால் இவர் தப்பித்துவிட,மாட்டிக்கொண்டது ஒல்லிபிச்சான் நடிகர்.ஆனால் தன் தவறை மறைக்க தன் அப்பாவிடம்,இவரைப்பற்றி ஏடாகூடமாக போட்டுக்கொடுக்க அவர்,தன்னோடு அப்போது நடித்த அந்த நம்பர் நடிகையிடம்,இந்த நடிகரைப்ப‌ற்றி சொல்ல .பெரிய நடிகரே இப்படி சொல்கிறாரே என அவ்ர் நம்பி இவரோடு சண்டை போட முறிந்தது இவர்கள் காதல்..

தொடரும்...



வெள்ளி, 22 ஜூன், 2012

::: நடிகர்களின் நிஜ முகங்கள் ::: PART 6


பகுதி 6:‍-

கண்டிப்பாக நீங்கள் யாரென்று யூகித்திருப்பீர்கள். அந்த நேரத்தில் சினிமாவில் நல்ல உச்சத்தில் இருந்தார்.அப்போது ஷெனாய் நகரில் வசித்து வந்த அவருக்கு அப்பொழுதுதான் திருமணம் ஆகியிருந்தது. ஃபோனில் அழைத்த ஒரு நண்பனிடம் பேசுவதை போன்று பேசிய‌ அவர்,தன்னுடய தேவைகளை கூறினார்.மறுநாள் காலை வரச்சொன்னார்.

பொதுவாக இந்த அளவுக்கு உச்சத்தில் உள்ள நடிகர்களுடன் நேரடியாக பேசுவதற்குள் தாவு தீர்ந்துவிடும்.ஆனால் அதற்கு நேர்மாறாக இருந்தார் அவர்.ஆனால் ஏனோ வெள்ளித்திரையில் மிளிர அவர் இன்று வரை போராடிக்கொண்டே இருக்கிறார்.

காலை சுமார் ஒன்பது மணியளவில் அவர் ஃபிளாட்டிற்கு சென்றேன்.என்னை வரவேற்ற அவரின் மனைவி,அவரது வீட்டின் வரவேற்பறையில் அமரச்செய்தார்.அவர் குளித்துக்கொண்டு இருக்கிறார் 10 நிமிடம் வெய்ட் பண்ணுங்க என்றார்.சரியென்று அன்றைய தினசரியை புரட்டிகொண்டிருந்தேன்,திடீரென்று யாரோ என் பெயரைச்சொல்லி அழைக்க,நான் சுற்றி பார்த்தேன். அப்போது அழைத்தது அந்த நடிகர் தான்.அவரின் வீட்டில் ஹாலோடு சேர்ந்து அமைந்திருந்த அந்த பாத்ரூமிலிருந்து தலையை வெளியே நீட்டி சாரி பாலாஜி கொஞ்ச நேரத்தில் வந்து விடுகிறேன் என்றார்.சொன்ன படி சிறிது நேரத்தில் வந்த அவர்,தனது மனைவியை அழைத்து அறிமுகப்படுத்தி வைத்தார்.இஸ்லாம் மதத்தை சேர்ந்தவரான‌ அவர் அதே மதத்தை பின்பற்றும் தனது நண்பியை காதலித்து மணம்புரிந்தவர்.

அவரிடம் பேசிக்கொண்டே,எனது வேலைகளை முடித்தேன்.உடனே என்னை காலை உணவு சாப்பிட அழைத்தார் நான் வேண்டாம் என்று மறுக்க பின் மனைவியிடம் ஜூஸ் கொண்டு வா என்று சொல்லிவிட்டு என்னிடம் தன்னுடைய அனுபவங்களை பகிரிந்து கொண்டே சாப்பிட்டார்.நானோ அவரை முதல் முதலாக அப்பொழுதுதான் சந்தித்தேன்,ஆனால் அவரின் பேச்சும்,நடந்து கொண்ட விதமும் என்னை மிகவும் நெகிழச்செய்தது.

தேங்ஸ் என்று சொல்லிவிட்டு,அங்கிருந்து கிளம்பிய நான் அடுத்து பார்க்க போனது மானையும் மயிலையும் ஆட்டி வைக்கிற அந்த மேடத்தை...

சௌத் ஃபோக் சாலையில் உள்ள அந்த நடன பயிற்சி கூடத்திற்கு எங்களை வரச்சொல்லியிருந்தார் அவர். அப்பொழுது மிகப்பிரபலமான காதல் ஜோடி அங்கு அமர்ந்திருந்தது.அது மார்க்கண்டேய நடிகரின் மகன் ஆவார்.அவர்கள் இருவரும் ஒரு ப்டத்தின் பாடல் பயிற்சிக்காக அங்கு வந்திருந்தனர்.20 வயது முதல் 30 வயது வரையுள்ள சுமார் அறுபது முதல் எழுபது பேர் அங்கு பல வித பயிற்சியில் இருந்தனர்.அந்த காதல் ஜோடி,தங்கள் பயிற்சியை விட காதல் குறும்புகளில் தான்அதிகம் நாட்டம் செலுத்தினர்.அவரிடமும் போய் பிசினஸ்பேசினோம்,அவரோ எல்லாவற்றையும் எங்கள் தயாரிப்பாளர் பார்த்துக்கொள்வார் என்று சொன்னார்.

சிறிது நேரத்தில் "அக்கா வர்றாங்க!!" "அக்கா வர்றாங்க!!" என்ற முணுமுனுப்பு கேட்டது.சிறிது நேரத்தில் அந்த மேடம் வந்தார்.அனைவரும் ஒவ்வொருவராக அவ‌ரது காலைத்தொட்டு வணங்கினர் அந்த காதல் "ஜோ"டி உட்பட.."குரு மரியாதையாம் அப்படி வணங்குவது.அவரது உதவியாளர் நாங்கள் வந்திருக்கும் விடயத்தை அவரிடம் கூற,அவர் எங்களைப் பார்த்து அருகில் வந்து அமருங்கள் என்றார்.

நாங்கள் விவரங்களைக்கூற,பொறுமையாக கேட்டுகொண்ட அவர்,நாங்கள் சுமார் 100 பேர் போறோம்.அதுல, 50 பேர் கிட்ட புதுசா வெளிநாடு டிராவல் பன்றாங்க அதனால,தயவுசெய்து நல்ல முறையில முடிச்சு கொடுங்க என்றார்.உடனே எல்லாரையும் அழைத்த அவர், "அப்பா எல்லாம் நல்லா கேட்டுக்கோங்க..இவ‌ங்க தான் நம்ம அஃபிசியல் ஏஜென்ட்ஸ்,எல்லாரும் இவங்ககிட்ட விவரம் கேட்டுக்கோங்க என்றார்.

நான் குறிப்பிட்ட அந்த மேடம் யாரென்று தெரிந்திருக்கும் உங்களுக்கு.அவர் நிறத்தில் சற்று கருப்பு என் கூட வந்திருந்த கோபாலும் கருப்பு,அவன் அவரை அக்கா என்று அழைக்க அவ‌ருக்கு உச்சி குளிர்ந்தது.அவர் என்னிடம் பேசுவதை விட அவனிடம் பேசுவதையே அவர் விரும்பினார். அவனும் கிளம்புகிற வரையில் அந்த "அக்கா" வை விட வில்லை.(நடுவில் என் காதில் கோபால்"சார் நாங்க ரெண்டு பேரும் ஒரே கலர்" அதான் அக்கா என்னிடம் நல்லா பேசுராங்க என விளக்கம் வேறு கொடுத்தான்.)சிறிது நேரம் கழித்து வெளிநாடு சம்பந்தமான சில விவரங்களை கேட்ட அவர், அவரின் தோழி நடிகைகள் எவ்வளவு வெளிநாட்டு பணம் எடுத்து செல்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தார்.

தொடரும்...

சனி, 16 ஜூன், 2012

சோற்றிற்கு திண்டாட போகும் தமிழகம்!!!

இதைப்படிக்கும் நீங்கள் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவராக இருந்தால்,இந்த பிரச்சனையின் வீரியத்தை நன்றாக உணருவீர்கள்.

தஞ்சையிலிருந்து திருவாரூர்,நாகப்பட்டிணம்,கும்பகோணம்,மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் ‍ மயிலாடுதுறை,திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளில் நீங்கள் பேருந்தில் பயணம் செய்தால் சாலையின் இருபுறமும் பச்சை பசேல் என காட்சியளிக்கும்..அதுவும் குறிப்பாக ஆகஸ்ட் முதல் மழைக்காலம் வரையில்..இயற்கையின் அழகை நீங்கள் கண்டு ரசிக்கலாம்..நான் மேலே குறிப்பிட்டதெல்லாம் சில வருடங்களுக்கு முன்பு வரை...

ஆனால் இப்போதோ நிலமை தலைகீழ்...சாலையின் இருபுறங்களிலும்.."ஹைவே சிட்டி","கோல்டன் சிட்டி",டீரீம் சிட்டி என நிறைய சிட்டிக்களைத்தான் பார்க்க முடியும்..பச்சைபசேல் என்று இருந்த நெல்வயல்கள் இப்போது வீட்டுமனைகளாக பிரிக்கப்பட்டு வெட்டவெளியாக காய்ந்து கிடக்கின்றன.மனிதன் பசிக்காக ஆதிகாலத்தில் விவசாயத்தைக் கண்டுபிடித்தான்.ஆனால் இப்போது அதனை பணத்திற்காக அழித்து வருகிறான்.

கிராமங்களில் சில ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கள் எல்லாரும் விவசாயத்தின் வருமானம் போதாமலும்,பணத்திற்காகவும் கல்லூரி, மருத்துவமனை, தொழிற்சாலை மற்றும் ரியல் எஸ்டேட்  உரிமையாளர்களிடம் தங்கள் நிலத்தை விற்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

காங்கிரஸ் அரசின் "உலகமயமாக்கம்" என்ற பொருளாதார கொள்கையால் அனைத்து மாநில விவசாயிகளும் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கின்றனர்.இந்த உலகமயமாக்கம்,தாராளமயமாக்கம் என்ற பெயரில் உலகத்தில் உள்ள பெரிய பணக்கார முதலைகளிடம் நம்மை அடகு வைப்பது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.இதில் அனைத்து தொழில்களும் பாதிக்க பட்டுள்ளன்.அதிகம் பாதித்திருப்பது விவசாயியும்,விவசாயமும்.கடந்த 25 ஆண்டுகளில் சுமார் 15 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் விவசாயத்தை விட்டு விலகியிருக்கிறது.


புதிதுபுதிதாக தொடங்கப்பட்ட மனை விற்பனை நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்கள் அனைத்தும் போட்டிபோட்டு கொண்டு நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை அழித்து,விவசாய நிலத்தை கூறுபோட்டு விற்பனை செய்து கொண்டிருக்கிறது.நல்ல காற்றாட்டம், தண்ணர், போக்குவரத்து வசதிகள் இப்படிப்பட்ட இடங்களில்தான் மக்கள் வீடுகட்ட‌ விரும்புவர்.இதை பயன்படுத்திதான் ரியல் எஸ்டேட்உரிமையாளர்கள் வயல்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி அதில் மண் நிரப்பி பிளாட்டுகளாக பிரித்து கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர்.பிற நிலங்கைள விட வயல்களை பிளாட் ஆக்குவதால் 100 மடங்கு வைர லாபம் கிடைக்கிறது.விவசாயத்தில் பல சிரமங்கள் உள்ளதால் விவசாயிகளும் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி விலைக்கு கொடுத்து விடுகின்றனர்.


தமிழகத்தை பொறுத்த வரை ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த மாவட்டத்தின் நெல் தேவையை 75 சதவிகிதம் பூர்த்தி செய்யும் அளவுக்கு வயல்கள் இருந்தன. ஆனால் இன்று 25 சதவகித தேவைய கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில், வெளிமாநிலங்கைள எதிர்பார்த்திருக்க வேண்டிய நிலைக்கு பெரும்பாலான மாவட்டங்கள் தள்ளப்பட்டு விட்டன. இப்படி வயல் வெளிகள் வீட்டு மைனகளாக மாறுவதற்கு அரசியல்வாதிகளும் ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகின்றனர்.

சிறிய மாநிலமான கேரளாவிலும் வயல்வெளிகளில் வீடுக‌ள் முளைக்க தொடங்கி இதே பிரச்சனை தலை தூக்கிய போது உடனெ விழித்தெழுந்த அப்போதய அச்சுதானந்தன் அரசு 2008ம் ஆண்டு "தண்ணீர் தடை பாதுகாப்பு சட்டம்" என்ற சட்டத்தை இய‌ற்றியது.இந்த சட்டம் மூலம்தண்ணீர் பாய்ந்து செல்லும் எந்த பூமியிலும், எந்த வயலிலும் வீடு கட்ட முடியாது.அதற்கு உள்ளாட்சியின் அனுமதி கிடைக்காது. இந்த சட்டத்தில் சில விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.அதாவது ஒருவருக்கு ஐந்து சென்ட் வயல் மட்டும் இருந்து, ஆனால் அவருக்கு வீடு இல்லையெனில், அப்படிப்பட்டவர் அந்த வயலில் வீடு கட்டலாம். அவ்வாறு கட்ட வேண்டுமெனில் அந்த வயலுக்கு உட்பட்ட தாலுகாவில் எங்கும் அவருக்கோ, அவரது மனைவிக்கோ, மகன், மகளுக்கோ வீடு இருக்க கூடாது. 

அவ்வாறு வீடு இல்லாமல்இருப்பதை அந்த பகுதி ஆர்.டி.ஓ. தைலைமயிலான கமிட்டி உறுதி செய்ய வேண்டும்.இந்த கமிட்டியில் உள்ளாட்சி மற்றும் விவசாய பிரதிநிதிகள் இடம் பெற்றிருப்பார்கள். ஆனால் இந்த கமிட்டி கூடி எவருக்கும் வயல் வெளியில் வீடு கட்ட இதுவைர அனுமதி வழங்கியதில்லை.இந்த கமிட்டி வயல்வெளிகளில் வீடு கட்ட அனுமதி வழங்க கூடாது என்று கூறிவிவசாயிகள் சார்பில் கேரள ஐேகார்ட்டில் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளதால்,வயல்வெளிகளில் வீடு என்பது கேரளாவில் நடக்காத காரியமாக மாறிவிட்டது.வயலை ஒட்டி உள்ள பகுதிகளில் பல நீண்ட ஆண்டுகளுக்கு முன்னர் தென்னை போன்ற மரங்கள் நட்டு வைத்திருப்பர். இதை "கைரபூமி" என்று அழைப்பது உண்டு.இங்கு வீடு கட்ட இந்த சட்டத்தில் வழிவைக செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த கைரபூமி கிராம ரிக்கார்டுகளில் வயல் என்று குறிப்பிட்டிருந்தால் அங்கும் வீடு கட்ட அனுமதி கிடைக்காது.இந்த சட்டம் காரணமாக கேரளாவில் ரியல் எஸ்டேட் வியாபாரம் வயல் வெளிகளுக்கு செல்லதாதால் அங்கு விவசாயம் காப்பாற்ப்பட்டுள்ளது. வீடுகள் மலைப்பிரேதசங்களிலும், காலி மனைககளில் மட்டுமே கட்டப்படுகிறது.


ஒரு நாட்டிற்கு இன்றியமையாதது அந்நாட்டின் உணவு உற்பத்தியே. அத்தகைய உணவு உற்பத்தியை இயற்கையாக பெற்றுள்ள நாடு நமது நாடு. அத்தகைய விவசாயத்தை பேணிக்காப்பது நமது கடமை. உணவு உற்பத்தி இல்லாமல் வேறு எந்த வளர்ச்சி இருந்தும் எந்த பயனும் இல்லை என்பது உண்மை.இதை தடுக்கஉடனடியாக கேரளாவைப்
போன்று தமிழ்நாட்டிலும் மிக கடுமையான‌ சட்டம் கொண்டு வர வேண்டும்.விவசாய நிலங்கள் எப்பொழுதும் விவசாய நிலங்களாக இருக்க வேண்டும்.விவசாய காரணங்களைத் தவிர, வேறு காரணங்களுக்காக விவசாய நிலத்தை விற்பனை செய்தால், அதை சார்பதிவாளர் தடுத்து நிறுத்த வேண்டும்.

விவசாயத்துக்கு தேவையான இடுபொருள், உரம், தண்ணீர், மின்சாரம் மிக  குறைந்த விலையில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். விவசாயத் தொழிலை லாபகரமான தொழிலாக்குவதற்கு எந்த வகையில் எந்தெந்த பயிர்களை எப்படி சாகுபடி செய்ததால் உரிய லாபம் கிடைக்கும் என்பதை விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஏழை விவசாயிகளுக்கு எளிய வகையில் கடன் கிடைத்திட வழி வகை செய்ய வேண்டும். விவசாயத்துக்காக பெறப்படும் கடன் வட்டி விகிதம் குறைக்கப்பட வேண்டும். விவசாயம் பாதுகாப்பு அரசின் கடமை மட்டுமல்ல, ஒவ்வொருவரின் கடமையுமாகும். உணவு என்பது இன்றைய தலைமுறைக்கு மட்டுமல்ல, நாளைய தலைமுறைக்கும் தேவை.கிராமப்புற இளைஞர்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த குறுந்தொழில்களில் ஈடுபட அரசு ஊக்கப்படுத்த வேண்டும். அவர்களுக்கு வங்கிக் கடன்கள் மேலும் எளிதாகக் கிடைக்கும் வகையில் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும்.


இன்றைய தலைமுறையினர் விவசாயத்தின் மீது எந்தவித ஈடுபாடும் இல்லாத நிலையை முற்றிலும் மாற்ற அரசு முனைப்புடன் பல ஊக்குவிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தி அவற்றை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே விவசாயத்தையும் அதுசார்ந்த கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த முடியும்.

இல்லையெனில் தமிழகம் உணவு தானியத்திற்கு கையேந்தும் நிலை வந்துவிடும்..



புதன், 13 ஜூன், 2012

::: நடிகர்களின் நிஜ முகங்கள் ::: PART 5

பகுதி 5:‍-



மாடிக்கு எல்லோரையும் அழைத்துப்போன அந்த நடிகர்,தள்ளாட்டத்துடனே வெளியே வந்தார். இதற்கிடையில் நான் பார்க்கும் நடிகர் எல்லாரிடமும் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன்.

இந்த கூட்டத்தில் இருந்து எஸ்கேப் ஆகி வெளியே வந்த புரட்சி நடிகரிடம் பேச ,அவர் தப்பா எடுத்துக்காதீங்க,இந்த விடயமெல்லாம் நம் மனைவிதான் கவனிச்சிக்கிறாங்க,ஆஃபீஸ் நம்பருக்கு ஃபோன் செய்து பாருங்க என்றவர், நாங்கள் ரெகுலரா 10 வருடமா ஒரே இடத்தில் வாங்கி வர்றோம் அதனால தேவைப்படாதுன்னு நினைக்கிறேன் என்றார்.இதற்கு நடுவில் எனக்கு உதவிய அந்த பி.ஆர்.ஒ மற்ற பி.ஆர்.ஒ க்களிடம் எனது நம்பரை, அனைவரிடமும் கொடுக்க சொல்லி இன்ஸ்டரக்ஷன் கொடுத்தார்.


அந்த நேரத்தில் "பாத்ரூமில் குளித்து பேமஸ் ஆன அந்த நடிகையின் மேனேஜர் கூப்பிடச்சொன்னதாக" அலுவலகத்தில் இருந்து ஃபோன் வந்தது.அப்போது அவர் நல்ல பிசி நடிகை."பாத்ரூம் சமாச்சாரம் எல்லாம் சமீபத்தில் நடந்ததுதான்.அப்போது அவர் கீழ்பாக்கம் அருகில் ஒரு ஃபிளாட்டில் வசித்து வந்தார்.அவர் மேனேஜருக்கு ஃபோன் செய்தவுடன்,அவர் மேடம் உங்களை உடனேவரச்சொல்றார் ஏன்னா ,அவர் நாளைக்கு காலையில கும்பகோணத்திற்க்கு சூட்டிங் போறார். அத‌னால நேரம் இல்ல இப்பவே டாகுமெண்டேஷனை முடிச்சிக்கலாம் என்றார்.


நான் அவரிடம்,நாளை எப்போது கிளம்புகிறார்கள் என்றேன்.9 மணிக்கு என்றார்.இப்போ சங்கத்தில இருக்கேன் நாளைக்கு காலையில 8 மணிக்கு வந்து கொடுக்கட்டுமா என்று கேட்டேன்.அவர் மேடத்திடம் கன்ஃபார்ம் பண்ணிட்டு சொல்றேன் என்றார். ஒரு வழியாக டைம் ஓ.கே ஆக,இதை அலுவலகத்தில் சொன்னேன். எனது டீமில் உள்ளவர்களுக்கு தாங்களும் ஒன்றிர‌ன்டு பேரையாவது சந்திக்க வேண்டும் எனவே நான் நீ என சண்டை, ஒரு வழியாக சமாளித்து மீன் நடிகையிடம் டாகுமெண்ட் கலெக்ட் பண்ண இவர், இடுப்பழகியிடம் செக் கலெக்ட் செய்ய இன்னொருவர் என ஆளொக்கொரு வேலை வழங்கப்பட்டது.


பொதுவாக காலை "ஸ்பெஷல்" டூட்டிக்குன்னு சொன்னாலே மூக்கால் அழும் பார்ட்டி எல்லாம் கரெக்டான டயத்தில் நல்லா குளித்து பல பல வென ஆஜர்.
ஒரு வழியாக காலை எட்டு மணிக்கு அவர் வீட்டிற்க்கு சென்றோம்.காலிங் பெல்லை அடிக்க நாய் குரைத்தது..அவரது வீட்டில் வேலை செய்யும் பெண் கேட்டை திற‌ந்து "யார்?" என்று கேட்டார்..விவரம் சொல்ல....அவரோ மேடம் இப்போதான் எழுந்தாங்க..பெரிய மேடத்தை மீட் பண்ணுங்க என்றார். யாருங்க பெரிய மேடம் என்றேன்? அவர் உடனே அவங்க மம்மி என்றார்..அவர் ஆங்கிலத்தில் 'மம்மி" என்று சரியாக வராமல் உச்சரித்தது எங்களுக்கு சிரிப்பை வரவழைத்தது .கூடவே வந்த கோபால் என்ற பையன் ச‌ற்றே குசும்பன்..அவன் அந்த பெண்ணிடம் நீங்க "ஜிம்மி" யை பார்த்துக்குங்க...நாங்க மம்மிய பார்க்கிறோம் என்றான். நான் அவன் வாயை மூடச்சொல்லி,அவர் அலுவலகத்தில் காத்திருந்தோம்.  



சிறிது நேரத்தில் அந்த நடிகயின் அம்மா வந்தார்கள்.அவ‌ரிடம் விவரம் சொன்னேன். அவர் "அவ இப்போதான் குளிச்சிகிட்டு இருக்கா.அவ மேக்கப் போட்டு வர ஒரு மணி நேரமாவது ஆகும் என்றவர்,அதனால நீங்க அவளிடம் கையெழுத்து வாங்க வேண்டியதை கொடுங்க நான் அவ குளிச்ச உடனே வாங்கிடறேன் என்றார்.நான் சரி என்பது போல தலையை ஆட்ட..கூட இருந்த கோபாலுக்கு முகம் சுருங்கி போனது. சற்றே சுதாரித்த அவன் "சாரி மேடம் எங்களுக்கு நேரேதான் அவங்க கையெழுத்து போடனும் என்றான் கறாராக...அவனது உள்நோக்கம் தெரிந்து எனக்கோ சிரிப்பு தாங்க முடியவில்லை..


அவ‌ரது அம்மா எழுந்து போனவுடன்.என்னைப்பார்த்து என்ன சார் நீங்க..
நான் இன்னைக்கு எவ்வளவு டீரீம் ல வந்திருக்கேன் தெரியுமா??!!!!!......
என் சரித்திரத்திலே இவ்வளவு சீக்கிரம் எழுந்ததும் கிடையாது இன்னிக்கு நான் குளிச்ச அளவுக்கு குளிச்சதும் கிடையாது.என் பொண்டாட்டி என்னைப்பார்த்து ஆச்சர்ய பட்டு போனா என்றவன்,தொடர்ந்து சார் வொய்ஃப் கிட்ட இதை சொல்லல.. இன்னைக்கு மீட்டிங் இருக்குன்னு சொல்ல்யிருக்கேன் சார்.கேமரா கொண்டு வந்திருக்கேன்..போட்டோ எடுத்த பிறகு காமிக்கலாம்னு இருக்கேன் என்றான்.


சரியென்று கனவில் உட்கார்ந்திருந்த கோபாலோடு,நானும் உட்கார்ந்திருந்தேன்.அப்போது எங்களைப்பார்க்க ஒருவர் வந்தார்.ச‌ற்று உற்று நோக்கிய பிறகுதான் தெரிந்தது அது ".......ஷா வென்று...திரையில் நான் பார்த்திருந்தற்கும் நேரேவும் நிறைய வித்தியாசம்.. மிக ஒல்லியான தேகம் வசீகரம்ற்ற முகம்,கைகளில் ஒடும் நரம்புகள் வெளியே தெரிய என கோபாலின் எல்லா கனவையும் நொறுக்கி தூள் தூளாக்கினார் அந்த கனவுக்கன்னி..

மனதைத்தேற்றிக்கொண்ட கோபால்..ஹலோ மேடம் என்றான்.எல்லா கையெழுத்துக்களையும் பெற்றுக்கொண்ட கோபால்.அவருக்கு தேங்ஸ் சொல்லி மேடம் ஒரு சின்ன ரெகொஸ்ட் என்றான்..என்ன என்று கேட்டவரிடம் உங்களோட ஃபோட்டோ ஒன்னு எடுத்துக்கனும் என்றான்.அவரோ இப்போ ஃபோட்டோ எல்லாம் எடுக்க முடியாதுங்க‌ன்னார்.கோபாலோ அவரை விடுவதாக இல்லை.கடுப்பான அவர் புரிஞ்சிக்கோங்க இன்னும் மேக்கப் போடல என சொன்னவுடந்தான் புரிந்தது கோபாலுக்கு...


நொந்துபோன கோபாலுடன் வேளியேறிய எனக்கு ஒரு நடிகரே ஃபோன் பண்ணினார்.அப்போது எனக்கு தெரியாது ஒரு நல்ல நடிகரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததுள்ளது என்று.

முதல் பட‌த்திலேயெ இரண்டு உச்ச நடிகைகளுடன் நடித்தார்.மேலும் ஒரு க்ளூ மேலே சொன்ன நடிகை பெயரின் கடைசி எழுத்துதான் இவர் பெயரின் முதல் எழுத்து.

தொடரும்...



திங்கள், 11 ஜூன், 2012

::: நடிகர்களின் நிஜ முகங்கள் ::: PART 4

பகுதி 4:‍-

யாரென்று கண்டுபிடித்தீர்களா ? கலையுலக பொட்டின் வாரிசு அவர்.அந்த நேரத்தில் அவர் ஒன்றும் பெரிய ஹீரோவெல்லாம் கிடையாது. சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து வந்தார்.இன்னும் க்ளூ வேண்டுமா?.இப்போது விளம்பரங்களில் நடித்து வருகிறார்.அப்பன் சேர்த்த காசை தின்று தின்றே அழித்த குடும்பம் அது..
அவர் அப்போது மிசுபிஷி லேன்சர் கார் வைத்திருந்தார்.எதற்கு அந்த "ஹாரன்" சத்தம் என்றால் அய்யா!!!??? வரும்போது ஒடிப்போய் கேட்டை திறக்க வேண்டுமாம்.இல்லாவிட்டால் அன்று நான் பார்த்த காட்சிதான். அவர் அன்று அந்த
வாட்ச்மேனைப்பார்த்து....
"ஏண்டா வேலைக்கார நாயே..என்ன .....டுங்க போன.... என எழுத முடியாத வார்த்தைகளால் அர்ச்சித்தார்..எனக்கு மன வேதனை, என்னடா இது நம்மால் தானே இவ்வாறு ஆயிற்று என்று..

ஒரு புறம் தாங்க முடியாத ஆத்திரமும் கோபமும்..

பணக்கார திமிரும்,புகழின்ஆணவமும் அவர் தலையில் குடிகொண்டிருப்பதை நான் கண்ணால் பார்த்தேன்.வெளியில் எவ்வளவு அழகாக பேசும் அவர்களின் உண்மை சொரூபத்தை நான் நேரில் கண்டேன்.

எனக்கு இன்று கூட "அவர்" என்று எழுத தோனவில்லை "அவன்" என்றே எழுத தோணுகிறது.

அன்றைய மாலைப்பொழுதில்,ஒவ்வொரு காராக வந்து நின்றது.அப்போதைய‌ சங்க தலைவரும்,(இப்போது கட்சி தலைவர்) ஒரு காரில் வந்தார்,தமிழில் புரட்சியான நடிகரும் வந்தார்.சமீபத்தில் இறந்த அந்த 'விலங்கு" நடிகரும் வந்தார்.பிறகு முத்தான‌ நடிகரின் வாரிசு நடிகரும் வந்து சேர்ந்தார்.

அப்போது எல்லாரும் "டாடா சஃபாரி" கார்தான் அதிகமாக வைத்திருந்த‌னர்.அதில் ஏ.சி யை போட்டு ஒரு காரில் முத்தான நடிகரின் வாரிசான "அலைகள்" நடிகரும் மற்றொரு காரில் "விலங்கு நடிகரும் உட்கார்ந்திருந்தனர்.

விலங்கு நடிகர் படத்தில் வருவதுபோன்ற மெலிதான எவர்சில்வர் உறை போட்ட அந்த வெளிநாட்டு மருந்து புட்டியை திறந்து குடித்துக்கொண்டே இருந்தார் மேலும் ஒரு புறம் கையில் சிகிரெட் வேறு...

அவரிடம் சற்றே பேச்சை கொடுக்க அவர் என்னைப்பற்றி கேட்டுவிட்டு,பேச ஆரம்பித்தார்..சிறிது நேரத்தில் திடீரென அவ‌ருக்கு போன் வர யாரிடத்திலோ கன்னடத்தில் பேசிக்கொண்டிருந்தார்.நான் பெங்கலூரூவில் வேலை செய்து கொண்டிருந்த போது,ஒரளவு கன்னடம் பேச பழகியிருந்ததால்,அவரிடம் கன்னடத்தில் பேச முயற்சிக்க சற்று வித்தியாசமாக உற்று நோக்கிய அவர்,பின் பேச்சை தொடர்ந்தார்...

அவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே, முன்னால் வந்த சில நடிகர்களை
அந்த பொட்டின் வாரிசு ஒன்று கூட்டிநுழைவு வாயில் அருகில் பக்கவாட்டில் அமைந்துள்ள அந்த கட்டிடத்தின் முதல் மாடிக்கு அனைவரையும் அழைத்துச்சென்றார்..
.
இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க ,அலைகள் நடிகரால் ஒரு நிமிடம் கூட ஏ.சி இல்லாமல் இருக்க முடியவில்லை.காரில் இருந்து வெளியே வருகிறார் இரண்டு நிமிடம் இருக்கிறார்,வேர்த்துக்கொட்டுகிறது,கைகள்,கழுத்து,உதடு எல்லம் சற்றே நிறம் மாறி இருக்க, கைகள் வேறு நடுக்கின்றது.அனைவரின் பார்வையும் அவர் மேல் இருக்க, பொட்டின் வாரிசு அவரையும் முதல் மாடிக்கு கூட்டிச்சென்றார்.

தொடரும்..

வெள்ளி, 8 ஜூன், 2012

::: நடிகர்களின் நிஜ முகங்கள் ::: PART 3

பகுதி 3:‍-


பாஸை அனுப்பிவிட்டு காத்திருந்த எனக்கு,மீண்டும் ஒரு காஃபி வந்தது.சிறிது நேரத்தில் அவருடன் நடிக்கும் அடிப்பொடிகள் எல்லாம் வந்துசேர,சிறிது நேரம் கழித்து அந்த சிங்கமான துணை நடிகரும் வந்தார். எல்லாம் ஒன்று கூடியவுடன் ஃபாரின் மருந்தை எங்கிருந்தோ கொண்டுவந்தார்கள்.
நம்ம சிரிப்பு நடிகருக்கு ஊற்றி கொடுத்து,அவர்களும் சாப்பிட்டார்கள்.சிரிப்பு என்னைப்பார்த்து அண்ணே சாப்பிடுங்க என்றார். தேங்ஸ் அண்ணே நமக்கு பழக்கமில்லைன்னு சொல்ல.

சிறிது நேரத்தில் உள்ளே போன மருந்து வேலை செய்ய ஆரமிபித்தது. நான் செக் வாங்குவதிலேயே ,குறியாக இருக்க,அவரோ கொஞ்சம் கொஞ்சமாக மருந்துக்கு கட்டுப்பட ஆரம்பித்தார். யாரோ விவேகமான நடிகரைப் பற்றி எடுத்துவிட உச்சஸ்தாயில் விவேகமான‌வருக்கு அர்ச்சனை நடந்தது.

எனக்கோ இவரை முடித்து விட்டு மீதி பிஸினஸை பார்க்க வேண்டும் என்ற முனைப்பு,அண்ணே செக் என்றேன்.கவலப்படாதீங்க உங்க கம்பெனிய ஏமாத்திட முடியுமான்னார்?
( நான் வேலை பார்த்த அந்த நிறுவனம் அரசாங்க ரீதியாகவும்,அரசியல் ரீதியிலும் நல்ல பின்புலம் உடையது)காந்திய‌ பேங்குல டெபாசிட் பண்ணிட்டு வந்து தருவாங்கன்னார்.சரி நம்மளும் கொஞ்சம் வேடிக்கை பார்க்கலாம் என உட்கார்ந்தேன்.

அப்போது பேச்சு கொடுத்த அவர், ஏண்ணே நீங்க விலை எப்படி குறைவா தந்திருக்கீங்கன்னார். நான் அதுக்கு தான், உங்க பி.ஆர்.ஒ ல்லாம் எங்களுக்கு பிஸினஸ் தந்திருக்காங்க என்றேன். போன தடவை சூட்டிங் போகும்போது போனப்ப 2 ரூவா கூட வாங்கனாங்க.எல்லாம் நம்ம பயல்கள் ஏற்பாடு பண்ணினது என்றார்.கூடவே நம்ம பசங்க கமிசன் அடிச்சிருப்பாங்க போல என்றவர்..."போயிட்டு போறாங்க,கடவுள் நமக்கு கொடுக்கிறார்",அவிய்ங்க கொஞசம் சாப்பிட்டு போறதுல என்ன வரப்போகுது என்றார்.

பரவாயில்லை,அவருக்குள்ளும் ஒரு நல்ல எண்ணம் இருப்பதாக நினைத்துக்கொண்டேன்.ஒரு வழியாக 2 மணி நேரம் காத்திருந்து செக்கை வாங்கினேன்.மருந்து உள்ளே இருந்ததால்,ரொம்ப சிரமப்பட்டு செக்கில் கையெழுத்து போட்டார்.ஒரு வழியாக நன்றி சொன்னேன். அண்ணே பேர ஞாபகத்தில வச்சிக்குங்க என்றேன்.சரின்னு சொன்னவர்.ஊருக்கு போய்ட்டு வந்து கூப்பிடறேன்,மீதி கரன்ஸி இருந்தா மாத்தி கொடுங்கன்னார்.

அதற்குள் வரிசையாக பல நடிகர்,நடிகைகளின் மேனேஜர்கள் போன் செய்ய ஆரம்பித்தனர்.

பொதுவாக டி.நகரில் உள்ள அந்த சங்க அலுவலத்தில்(இப்போது இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டபடுகிறது) ஒய்வு கிடைக்கும் போது மற்றும் மாலை நேரங்களில் முக்கிய நடிகர், சில நடிகையர்கள் அங்கு வருவர். அங்கே ஒரு கலையரங்கம்,ஒரு சின்ன ஸ்டுடியோ,ஒரு கேண்டீன்,அதில்லாமல் உள்ளே நுழையும்போதே ஒரு அலுவலகமும்,இடது புறம் ஒரு பெரிய அலுவலகம் மற்றும் முதல் மாடியில் ஒரு அலுவலகமும் இருக்கும்.கீழே உள்ள அலுவலகத்தில்தான் சங்க தலைவர் அறை உள்ளது.

பிஸினஸுக்காக அலைந்து,அலைந்து அங்குள்ள வாட்ச்மேன் முதல் நான்கைந்து நபர்கள் அறிமுகமானார்கள்.எனக்கு யார் வந்து செல்லுகிறார்கள் என்று தகவல் தரும் சோர்ஸ்ம் அவர்கள்தான்.

ஒரு புறம் எல்லாரிடமும் தொடர்பிலிருக்க,மறுபுறம் என் டீமுடன் கோ-ஆர்டினேட் செய்து,வெளிநாட்டு கரன்ஸி,டிராவலர்ஸ்செக்குகளை ஏற்பாடு செய்து வந்தேன்.என்னுடைய முழு நேர அலுவலகமாகிப்போனது அந்த இடம்.

அன்று மாலை,அந்த வாட்ச்மேனிடம் அவரை டீ குடித்து விட்டு,எனக்கொரு டீ வாங்கிவர கேண்டீனுக்கு அனுப்பினேன்.அப்போது ஒரே ஹாரன் சத்தம்.போன வாட்ச்மேன் தலைதெறிக்க ஓடி வந்தார்.என்ன என்று நான் எட்டி பார்க்க. அப்போது நான் கண்டது என் மனதை மிகவும் கஷ்டப்படுத்தியது.சே...இவ்வளவு மோசமாகவா நடந்து கொள்வார் இவர் என எண்ணத்தோன்றியது..

அப்படி நடந்து கொண்டவர் யார் தெரியுமா?...சின்ன க்ளூ..

இந்த "சின்ன" தான் க்ளூவே..!!!!

தொடரும்....

வியாழன், 7 ஜூன், 2012

::: நடிகர்களின் நிஜ முகங்கள் ::: PART 2

பகுதி 2:‍-




நான் முதலில் கூப்பிட்டது சமீபத்தில் ஏழரையை தானே இழுத்துக்கொண்டு படம் இல்லாமல் இப்போது தவித்துக்கொண்டிருக்கும் அந்த சிரிப்பு நடிகர்.

எதற்கு முதலில் அவரை கூப்பிட்டேன் என்றால்,உங்கள் எல்லாரையும் போல எனக்கும் அவரின் நடிப்பு பிடிக்கும். நான் அவரை முதலில் அழைத்த போது அவரது தோழர் (தற்போது உயிருடன் இல்லை,இறந்து விட்டார்) தான் போனை எடுத்தார் என்னை அறிமுகப்படுத்தியவுடன்,
அவரிடம் போனை கொடுத்தார் ,பேசினேன்.

மிகுந்த மரியாதையுடன் அண்ணே போட்டு கூப்பிட்டார். என்னை அவரது அலுவலகத்துக்கு வருமாறு சொல்ல,நான் எவ்வளவுக்கு அண்ணே "பாரின் எக்சேஞ்" வேனும் என்றேன். உடனே அவர் சொன்ன "நம்பர்" கேட்டு கிறுகிறுத்துப்போனேன்.

ஏனென்றால்,அந்நிய செலவாணி எடுத்துச்செல்ல "ரிசர்வ் வங்கி" நிறைய நிபந்தனைகளை விதித்துள்ளது.வெளிநாட்டில் வாழும் நண்பர்களுக்கு அதைப்பற்றி தெரிந்திருக்கும். நாம் நினைக்கின்ற ரூபாய்க்கெல்லாம் "பாரின் எக்சேஞ்" எடுத்து செல்ல முடியாது.டூரிஸ்ட் என்றால் ஒரு அளவும்,பிஸினஸ் டிரிப் என்றால் கூடுதலாகவும் எடுத்து செல்லலாம்.மேலும் அப்போது,
பாஸ்போர்ட்டில் அதை கொடுக்கும் கம்பெனி என்டார்ஸ் செய்யவேண்டும். 
அவர் சொன்ன "நம்பர்" எல்லாம் கள்ளத்தனமாகத்தான் எடுத்துச்செல்லலாம்,
கஸ்டம்ஸில் செக் செய்தால் ஃபைன் கட்ட வேண்டியதுதான். 
அவரிடம் அதை எடுத்துச்சொல்ல,அவரோ அப்பாவியாக,பரவாயில்லை அண்ணே அட்ஜஸ்ட் பண்ணி கொடுங்க என்றார்.எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. 

அந்த நேர‌த்தில்தான் அவர் வீட்டில் இன்கம்டெக்ஸ் ரெய்டெல்லாம் ஆகி,பெரும் தொகையை இழந்திருந்தார்.அவரின் மற்றொரு (விவரமான!!!)நண்பர் மூலம் எடுத்து சொல்லி புரிய வைத்தோம்.

ஒரு வழியாக தொகை உறுதியாக,மறுநாள் அவருக்கு தேவையான கரன்ஸியை எடுத்துக்கொள்ள,எனது பாஸ்(தற்போது அவர் அந்நிறுவனத்தின் " ஃபிராடக்ட் ஹெட்" ஆக உள்ளார்)தானும் அவரைப்பார்க்க வந்தார்.

சாலிகிராமத்தில் உள்ள அலுவலகத்துக்கு சென்றோம்.அப்போது வீடும் அதன் அருகிலேயே இருந்தது.சிறிது நேரத்தில் வந்தார். எங்களுக்கு கை கொடுத்த அவர், பிறகு உதவியாளர்களிடம் சொல்லி காஃபி வரவழைத்து கொடுத்து உபசரித்தார். அவர் பேசும்போது,தான் பட்ட கஷ்டங்களை சொல்லி ஈசியாக தான் இந்த அளவிற்க்கு உயர்ந்து விடவில்லை என்பதை சுட்டிகாட்டினார்.

எனது பாஸுக்கோ அவரை நடிக்க சொல்லி பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை இருந்தது.அதை அவரிடத்தில் சொல்ல உடனே நடித்துகாட்டினார்.(ஊஊஊஉ......என அவரது சிறப்பு அழுகையும் சேர்த்துதான்).தனது மணியான ம‌கனை அறிமுகப்படுத்தி அவன் டியூசனுக்கு ஒரு கம்பியூட்டர்(அவருக்கு லேப்டாப் என்று சொல்ல தெரியவில்லை) கேட்பதாக சொல்லி ,அதைப்பற்றி விவரம் கேட்டார். நான் உடனே என்ன படிக்கிறான் என்றேன் .8வது என்றார்.எதற்கு 8வது படிக்கிற பையனுக்கு என்றேன்? உடனே அவர் "அய்யோ! அவன் இதை வாங்கி கொடுத்தாலாவது எதாவது படிப்பான் நினைக்கிறேன்" என்றார்.

பிறகு நாங்கள் சொன்ன அப்ளிகேஷனில் எல்லாம் அவர் நண்பரிடம் கேட்டு,கேட்டு கையெழுத்து போட்டார்.ஒரு கையெழுத்து போடவே நீண்ட நேரம் எடுத்துக்கொண்டார்.பிறகு பேமண்ட் பற்றி கேட்டோம்.நீங்க உட்காந்திருக்கும் சோஃபா விலிருந்து மாறி சேர் ல் உட்காருங்க என்றார். எங்களுக்கு ஏன் என்று புரியவில்லை.பிறகு அந்த சோஃபா வை நகர்த்த அதன் கீழே கருப்பு பாலித்தீன் கவரில் கட்டு கட்டாய் காந்தி பார்த்து சிரித்தார்.ஏதோ பழைய புத்தகத்தை அடுக்கி வைத்திருப்பது போல வைத்திருந்தார்கள்.

நான் :ஃபாரின் எக்சேஞ்" இல் வேலைப்பார்த்தாலும்,அவ்வளவு காந்தியை இப்படி ஒரு கோலத்தில் பார்த்ததில்லை.அதிலிருந்து 3,4 கவரை எடுத்து எண்ணுங்கள் என்றார். 

நானோ அவ‌ரிடம் செக் கொடுத்திடுங்க (குறிப்பிட்ட தொகைதான் கேஷ் ஆக வாங்கலாம்) என்று கேட்டேன். 

அவர் வெண்ணிலா கபடி குழு சூரி மாதிரி மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க(அட்ஜஸ்ட் ப்ண்ணிங்க என்று...)..அவருக்கு புரியவைப்பதற்க்குள் ஸ்ஸ்ஸ்.....அப்ப்ப்ப்ப்பாடா.....என்று ஒரு வழி ஆகிவிட்டது.

அப்போதுதான் புரிந்தது சினிமா உலகத்தில் காந்தியை எவ்வாறு கையாலுகிறார்கள் என்று. ஒரு வழியாக என் பாஸை அனுப்பி விட்டு 
செக் குக்காக காத்திருந்தேன்.

தொடரும்...


புதன், 6 ஜூன், 2012

::: நடிகர்களின் நிஜ முகங்கள் ::: PART 1


பகுதி 1

சில ஆண்டுகளுக்கு முன் என் தொழில் நிமித்தமாக, நமது தமிழ் இயக்குனர்,நடிகர்,நடிகைகளுடன் பழகுகின்ற வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

அவர்களுடன் நெருங்கி பழகியபோதுதான் அவர்களின் நிஜ முகங்களை காண முடிந்தது.அந்த அனுபத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நான் அப்போது ஒரு பிரபலமான வணிக நிறுவனத்தில் விற்பனை மேலாளலராக பணியாற்றி வந்தேன்.அது பிரபலமான சிமெண்ட் நிறுவனத்தின் ஒரு பிரிவாகும்.அந்நிறுவனம் அந்நிய செலவாணி வர்த்தகத்திலும் ஈடுபட்டுள்ளது.

அப்போது நடிகர் சங்க கடனை அடைப்பதற்காக வெளிநாடுகளில்(லண்டன்,துபாய்) கலை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்து சுமார் 330 பேர் பயணம் செய்ய திட்டமிட்டனர்.இதற்கான பயண் ஏற்பாட்டை நடன‌ இயக்குனர் நடத்தும் டிராவல்ஸ் நிறுவனம் செய்தது.

சுமார் ஆறு கோடி ரூபாய் வர்த்தகம் உள்ள அந்த பிசினஸ்ஸை எடுக்க, நான் எப்படியாவது ஒரு தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள‌ பெரு முயற்சி எடுத்து வந்தேன்.ஒரு வழியாக பலமுறை அலைந்து நடிகர் சங்க பி.ஆர்.ஒ க்கள் அறிமுகமானார்கள்.

அதில் எனக்கு மிகவும் உதவியவர் சமத்துவ தலைவரின் நண்பரும்,அவரின் பி.ஏ வும்,அவருடன் ஒன்றாக ஒரே பத்திரிக்கையில் வேலை செய்தவரும் ஆகும்.(இன்னும் நட்பு தொடர்வதால் பெயரை குறிப்பிடுவது ஆரோக்கியமல்ல)

ஒரு வழியாக பேசி கணிசமான பிஸினஸை தர சம்மதித்தார்கள்.பிஸினஸ் அக்ரிமெண்டெல்லாம் ஒன்னும் கிடையாது. பொதுவாக சினிமா உலகத்தினர் இதே போன்ற விடயங்களுக்கு வெளி ஆட்களுடன் நேரடியாக தொடர்பு வைத்துக்கொள்வதில்லை,பி.ஆர்.ஒ சொல்படிநடப்பார்கள்.
அது மட்டுமல்லாது, பி.ஆர்.ஒ க்களும் அவர்களுக்கு நம்பிக்கையாக 
நடந்துகொள்வார்கள்.

அதன் படி பயணம் செய்யும் அனைத்து இயக்குனர்,நடிகர்,நடிகைகளின் பர்சனல்,ஆபீஸ் நம்பர்கள் அடங்கிய லிஸ்ட் கொடுத்தார்கள்.மேலும் சில நடிகர்களின் பேரைச்சொல்லி நேரம் பார்த்து பேசவும் சொன்னார்கள். அந்த லிஸ்ட்டை நம்பிக்கையாக வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தினார்கள். 

பிஸினஸ் பெற்ற விடயம் ஆஃபிஸிக்கு செல்ல அனைவரும் என்னை மொய்க்க தொடங்கினார்கள் ‍ எல்லாம் போன் நம்பருக்குகாகத்தான்.

லிஸ்டை யாரிடமும் கொடுக்காதே என்று எனது மேலதிகாரி என்னிடம் கூறிவிட்டு அவர் இரண்டொரு நம்பர்களை பெற்றுக்கொண்டார்.

நான் லிஸ்டை வரிசைப்படுத்தி வைத்துகொண்டு,முதலில் போன் பேசலாம் என்று தேர்வு செய்தது யார் பெயரைத்தெரியுமா ?

தொடரும்...




செவ்வாய், 5 ஜூன், 2012

உணவே மருந்து !!! நீங்களே மருத்துவர் !!! பகுதி 9

பகுதி 9:-

அடுத்து ???

>>>>பூண்டு<<<
மலைப்பூண்டு
 இரண்டு விதமான பூண்டுகள் சந்தையில் கிடைக்கும்.ஒன்று நாட்டுப்பூண்டு,மற்றொன்று மலைப்பூண்டு.முதலாவது அளவில் சிறுத்தும், மலைப்பூண்டு சற்று பெரிதாகவும் இருக்கும். நம் நாட்டுப்பூண்டிற்க்கு வீரியம் சற்று அதிகம்.அதனால் வ்றுவிறுப்பும் காரமும் சற்று கூடுதலாக இருக்கும்.முடிந்த அளவு நாட்டுபூண்டை பயன்படுத்துங்கள்.



நாட்டுப்பூண்டு

பூண்டானது முதலில் உடலில் 
உள்ள ரத்தத்தை சுத்திகரிப்பதுடன், கொலஸ்ட்ரால்மற்றும் கொழுப்பைகுறைக்க உதவுகிறது.
மேலும் இருதய நோயிலிருந்தும் நம்மை பாதுகாக்கிறது.

பொதுவாக நம் மக்கள் பூண்டை பயன்படுத்துவது உண்டு.ஆனால் வாய் நாற்றம் வரும் என்று இந்த தலைமுறையினர் ஒதுக்குகின்றனர்.

பூண்டை நாம் பலவிதமாக பயன்படுத்தலாம். 

வத்தகொழம்பு,ரசம்,பூண்டு சட்னி என்பது அனைவரும் பயன்படுத்துவது தெரிந்ததே.வேறு சில வகைகளிலும் பூண்டை பயன்படுத்தலாம்.
பூண்டை உரித்து அதை மிக சிறிய துன்டுகளாக நறுக்கிகொள்ளவும்.

நீங்கள் இட்லி தட்டில் ஊற்றிய பிறகு,அதன் மீது தூவி பிறகு ஆவியில் வைக்க வேண்டும்.இட்லியுடன் பூண்டும் சேர்ந்து ஆவியில் வெந்திருக்கும்.பிறகு வழக்கம் போல சட்னி சாம்பாருடன் தொட்டு சாப்பிடலாம்.இதே மாதிரி தோசையின் மீது தூவியும்(பொடி தோசைக்கு பொடி தூவுவது போல்)பயன்படுத்தலாம்.

இரவு படுப்பதற்க்கு முன் நிறைய பேருக்கு பால் அருந்தும் வழக்கம் இருக்கும் 

ஒரு டம்ளர் பாலுடன் இரண்டு மடங்கு தண்ணீர் சேர்த்து, பூண்டை அதனுடன் சேர்த்து கொதிக்க விடவேண்டும் பால் சுண்டி மீண்டும் 1 டம்ளர் ஆக வரும் வரை காத்திருந்து பிறகு வடிகட்டி அருந்தலாம்.இதுவும் உடலுக்கு மிக நல்லது.பெண்கள் இதை செய்து பயன்படுத்திவிட்டு சொல்லவும்.

சின்ன வெங்காயம் (அ) சாம்பார் வெங்காயம்


இதுவும் ஒரு அற்புத மருந்து.உடலில் ரத்தத்தை சுத்திகரித்து சிறுநீர் மூலம் கழிவை வெளியேற்றும் தன்மையை கொண்டது.கொலஸ்ட்ரால்
மற்றும் கொழுப்பைகுறைக்க உதவுகிறது.

இதை நாம் சாம்பார்,சட்னி ஆகியவற்றிற்க்கு பயன்படுத்துவது போல பல வகைகளில் பயன்படுத்தலாம்.சிறிது சிறிதாக நறுக்கி வதக்கிவிட்டு தேங்காய் சட்னி வகைகளுடன் சேர்க்கலாம்.

தோசை மீது தூவி வார்க்கலாம்.வாய் நாற்றம் எடுக்கும் என நினைப்பவர்கள் விடுமுறை தினங்களில் பயன்படுத்துங்கள்.மேலும் பச்சையாக சாம்பார் சாதம் மற்றும் பழையது எனப்படும் பழைய சோறுக்கு எடுத்துக்கொள்ளலாம்.

தொடரும்...


திங்கள், 4 ஜூன், 2012

உணவே மருந்து !!! நீங்களே மருத்துவர் !!! பகுதி 8

பகுதி 8:-

இப்போது முக்கியமான பகுதிக்கு வந்துவிட்டோம்.இப்போது எடையை குறைக்க கூடிய உணவுகள் பற்றி பார்க்கலாம்.


நீங்கள் தொடர்ந்து சாப்பிடும் உணவுகளை பதிவுசெய்வது ஒருபுறம் நடக்க,அடுத்து உடல் எடையை குறைக்க எடுக்க வேண்டியது என்ன என்று பார்ப்போம்.

1.உடல் எடையை குறைக்க உதவும் உணவுகளை எடுத்துக்கொள்ளுதல்.
2.எளிமையான உடற்பயிர்ச்சி.
3.குறைவான கலோரி உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளுதல்.

இதில் 3வது தலைப்பை பற்றி விரிவாக பார்த்துள்ளோம்.மீதி இரண்டையும் பார்ப்போம்.

நம்மில் பலருக்கு காலையில் எழுந்தவுடன் "பெட் காஃபி" குடிக்கும் பழக்கம் இருக்கும்.பழக்கம் இருப்பவர்கள் தயவுசெய்து விட்டு விடவும்.அது நம் உடம்பை பாழாக்கும்.காலையில் எழுந்து பல் துலக்கியவுடன் வெறும் வயிற்றில் 2 அல்லது 3 டம்ளர் தண்ணீர் குடிப்பது நல்லது. 
அவ்வாறு செய்வதால் நம் குடலில் ஒட்டியிருக்கும் அழுக்குகளை சுத்தபடுத்துவதுடன்,உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்.
மேலும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெந்நீரில் அரை மூடி எலும்பிச்சை பழம் சாறு சேர்த்து அத்துடன் 2 சி.தேக்கரண்டி தேன் கலந்து தொடர்ந்து பருகி வந்தால் அது நமது எடையை குறைக்க உதவும். மேலும் இவை செரிமான சக்திக்கும்,உடலுக்கு புத்துணர்ச்சியையும் தரும்.

கொள்ளு:-


அடுத்து நாம் காலையில் எடுத்துக்கொள்ளும் சிற்றுண்டிக்கு தொட்டுக்கொள்ள சட்னிக்கு தேங்காய்க்கு பதிலாக,தக்காளி,கேரட்,
கத்திரிக்காய்,வெங்காயம்,பூண்டு ,ஆகியவற்றைபயன்படுத்துங்கள்.
பொடியில் பருப்புடன் கொள்ளை சேர்த்து அரைத்து பொடி தயார் செய்து பயன்படுத்துங்கள்.கொள்ளு உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பை கரைக்கும். கொள்ளு துவையலும் செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.கொள்ளு முதலில் சாப்பிடுபவர்கள் கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டு பிறகு பயன்படுத்தவும். ஏனென்றால் கொள்ளு சற்றே சூட்டை அதிகப்படுத்தும்.
மேலும் வயிற்றில் உள்ள வாயுவை வெளியேற்றிவிடும்.
கொள்ளை ,ஊறவைத்து சுண்டல்,குழம்பு,ரசம் ஆகியவற்றை செய்யலாம்.
வார‌த்திற்க்கு 2 அ 3 முறை சேர்த்துக்கொள்வது போதுமானது.தேவையற்ற கொழுப்பை குறைப்பதில் கொள்ளுவிற்க்கு நிகர் வேறெதுவுமில்லை.

கத்திரிக்காய்:-




என்னங்க கத்திரிக்காய போய் உடல் எடையை குறைக்கும்னு எழுதுறீங்க என்று நீங்கள் நிறைய பேர் நினைக்கலாம்.ஆனால் கத்திரிக்காயை (குறைந்த எண்ணெய்,மசாலா சேர்த்து) சமைத்து தொடர்ந்து சாப்பிட்டால் அது உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவும்.

கொய்யாபழம்:-



கொய்யாவிற்க்கும் இதே குணம் உண்டு. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவும்.


புதன், 9 மே, 2012

உணவே மருந்து !!! நீங்களே மருத்துவர் !!! பகுதி 7

பகுதி 7:-

வேலைப்பளுவின் காரணமாக 3 வாரங்கள் இடைவெளி ஏற்பட்டு விட்டது.

நாம் இதுவரை கலோரிகள் பற்றியும்,அதன் வகைகள் பற்றியும் பார்த்தோம் மேலும் உணவின் சில வகைகளைப் பார்த்தோம். 

நான் பகுதி 2இல் சொல்லியபடி அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது ஒரு
Excel ல் கோப்பை உருவாக்கிகொள்ளுங்கள்.கணினி இல்லாதவர்கள் ஒரு நோட்டை தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.கீழே கொடுக்கபடும் சில குறிப்புகள் முன்னே சொன்னவைதான் உங்கள் ஞாபகத்திற்க்காக மீண்டும் நினைவூட்டல்.

முதலில் உங்கள் தற்போதய எடை,இடுப்பு சுற்றளவு ஆகியவற்றை குறித்துக்கொள்ளுங்கள்.அடுத்ததாக நீங்கள் உங்கள் உயரத்தை சென்ட்டிமீட்டரில் அளந்து அதில் நூறை கழிக்கவும்.வரும் மீதியெ உங்கள் எடையாக இருக்க வேன்டும்.

உதாரணம் : எனது உயரம் 171 செ.மீ எனவெ 171 கழித்தல் 100 = 71 கிலோ.(இருக்கவேண்டியது)


ஆனால் எனது எடை 85 என்றால் 85‍ கழித்தல் 71 = 14 கிலோ.

1 கிலோவிற்கு 7700 கலொரிகள் எனவே 14*7700 = 107800 கலோரிகள் அதிகம் உள்ளது. அவை அனைத்தயும் நாம் எரித்து, எடையை குறைக்க வேண்டும்.

தினமும் நீங்கள் சாப்பிடும் உணவை அளவோடு எழுத ஆரம்பியுங்கள். இதற்கு முன் எழுதிய பதிவுகளில் இருந்து கலோரி அளவுகளை வைத்து தினமும் எவ்வளவு கலோரிகள் சாப்பிடுகிறீர்கள் என்பதை கண்டிப்பாக எழுதி வரவும்.
ஏனெனில் இதன் மூலம் தான் நாம் எவ்வளவு கலோரிகள் அதிகம் எடுத்துக்கொள்கிறோம் என்பது தெரிய வரும்.அதை வைத்து தான் நமது உணவு பழக்கத்தை மாற்றி அமைக்கமுடியும்.அடுத்ததாக நீங்கள் கட்டாயமாக தினமும் குறைந்த அளவாவது பழங்கள்,காய்கறிகள் எடுத்துக்கொள்ளவேண்டும்.இவை அனைத்தும் உடல் எடையை குறைக்க (மருத்துவரிடம் செல்லாமல்,பணம் செலவு செய்யாமல்)தேவைப்படும் அடிப்படை முயற்சிகள். நீங்கள் இதுவரை எனது பதிவுகளை படிக்காதவர்களாக இருந்தால் தயவு செய்து முதல் பதிவிலிருந்து படிக்கவும்.

நீங்கள் இவ்வாறு எழுத ஆரம்பித்தால் ஒரு வாரத்தில் நமக்கு நாமே,சராசரியாக எவ்வளவு உணவு அருந்துகிறோம் என்பது பிடிபட்டுவிடும்.

பிறகுதான் உணவு பழக்கமும்,எடை குறைப்பு பயிற்சியும்...

தொடரும்....
 

வியாழன், 3 மே, 2012

ஆதிச்சநல்லூர்




ஃபேஸ்புக் நண்பர் ஒருவர் எழுதியிருந்ததை மீள்பதிவு செய்கிறேன்


உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது அகழ்வாராய்ச்சி முடிவுகளை இந்திய மத்திய அரசு மூடிமறைப்பு தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். 

தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர். தென்பாண்டி நாட்டில் இத்தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும். அது மட்டுமல்ல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. 

இந்த ஆதிச்ச நல்லூர்… ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நமது மக்கள் நாகரீகத்தோடு வாழ்ந்த ஊர். ஆச்சரியமாக இருக்கிறதா?..ஆம் அதுதான் உண்மை. இந்த இடுகாடு[?]. கி.மு பத்தாம் நூற்ராண்டுக்கும் முந்தையது. இன்றைய ஆய்வுகள் மேலும் ஒரு ஆயிரம் வருடங்களை பின்னுக்குத் தள்ளலாம் என்று தெரிவிக்கின்றன. நாம் அறிந்த எந்த இந்திய சரித்திர காலகட்டத்துக்கும் முந்தைய காலகட்ட மக்களின் இடுகாடு இது. தமிழ்க்குடியின் தொன்மைக்கான முதற்பெரும் தொல்பொருட் சான்றும் இதுவே. ஏறக்குறைய கிருஸ்து பிறப்பதற்கு எண்ணூறு வருடங்கள் முன்பே இங்கு நாகரீகம் மிகுந்த மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இதனை முதன் முதலில் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர். ஜாகர் என்பவர்தான். 1876 -ஆம் ஆண்டு இந்த பகுதியில் ஆராய்ச்சிக்காக வந்த அவர் கண்டுபிடித்ததுதான் இந்தத் தொல் தமிழர்களது நாகரீகம். அந்த ஜாகர் தான் கண்டுபிடித்தவற்றில் பலவற்றை ஆதாரத்துக்காக ஜெர்மனுக்கே எடுத்துச் சென்றுவிட்டார்.

அப்பொருட்கள் இன்னமும் ஜெர்மனியில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் இருக்கிறது. பிரஞ்சு நாட்டைச் சார்ந்த லூயி வேப்பிக்கியூ என்ற அறிஞர் 1903 ஆம் ஆண்டு ஆதிச்ச நல்லூர் வந்து சில தாழிகளைத் தோண்டி எடுத்தார். அப்போது மண்வெட்டி, கொழு முதலியன கிடைத்தன. ஆதிச்ச நல்லூரில் அகழ்வாய்வில் கிடைத்த அந்தப் பொருள்களை அவர் பாரிசுக்கு எடுத்துப்போய்விட்டார். இவ்வாறு ஆதிச்ச நல்லூரில் கிடைத்த மிகத்தொன்மை வாய்ந்த பொருள்கள் மேல் நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அந்த புதைபொருள் சின்னங்கள் கிடைத்தால் ஆதிச்சநல்லூரின் தொன்மையான வரலாறு நமக்குத் மேலும் தெரியும். 1905 ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியக மதிப்புறு துணைக் கண்காணிப்பாளர் அலெக்சாந்தர் ரீயா அவர்கள் ஆதிச்சநல்லூர் வந்து மிகவும் நுணுக்கமாக அகழ்வாய்வு செய்து ஒரு பட்டியல் தயாரித்துக் கொடுத்ததோடு அகழ்ந்தெடுத்த பொருள்கள் அனைத்தையும் சென்னை அருங்காட்சியகத்தில் இடம்பெறச் செய்தார். 

இவரும் இங்குள்ள மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழி, ஆபரணங்கள், எழுத்துக்கள் போன்றவற்றை அகழ்வாராய்ச்சி மூலம் ஆராய்ந்து பார்த்து விட்டு அதிர்ச்சியில் உறைந்து போனார். இதிலென்ன அதிர்ச்சி இருக்கிறது? என நினைக்கிறீர்களா? அந்த அதிர்ச்சிக்கு காரணம் அந்த அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட அன்றைய மக்கள் பயன்படுத்திய இரும்பால் ஆன கருவிகள்தான். "மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த தமிழர்கள் இரும்பைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால், அதை உருக்குவதற்கான உலைகளை எங்கு வைத்திருந்தார்கள், அதை செதுக்குவதற்கும் சீராக்குவதற்கும் எத்தகைய தொழில் நுட்பங்களைக் கையாண்டார்கள், அப்படியாயின் இவர்களது நாகரீகம்தான் மற்ற அனைத்து நாகரீகங்களுக்கும் முற்பட்ட நாகரீகமாக இருந்திருக்க வேண்டும் அல்லவா?. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்பைக் கண்டுபிடித்து தேன் இரும்பு, வார்ப்பு இரும்பு, எஃகு இரும்பு ஆகியவற்றை உருவாக்கி இருக்கின்றனர் . பயிர்த்தொழில், சட்டிப்பானை வனையும் தொழில், நெசவுத் தொழில், கப்பல் கட்டும் தொழில் போன்றவற்றை இரும்புக் கருவிகள் மூலம் திறம்பட வளர்த்து கடல் வாணிபம் செய்து உலகப் புகழ்பெற்றவர்கள் தமிழர்கள் என ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழ்வாய்வுச் சின்னங்கள் உறுதிப்படுத்துகின்றன. திராவிடர்கள் குறிப்பாக தமிழர்கள் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தார்கள் என்ற கருத்துக்கு இந்த அகழ்வாய்வுச் சின்னங்கள் முடிவு கட்டியது குறிப்பிடத்தக்கதாகும். 

மிகத் தொன்மையான காலத்திலிருந்தே இரும்பைப் பிரித்தெடுத்து அதை பல பொருள்களாகச் செய்து பயன்படுத்துவதில் தமிழர்கள் கைதேர்ந்தவர்கள் என்று அறியமுடிகிறது. சங்க இலக்கியத்தில் இரும்பினால் செய்யப்பட்ட பொருள்கள் உவமையாகக் கூறப்பட்டுள்ளன. மிகத் தொன்மையான காலத்திலேயே தமிழர்கள் எகிப்து, ஆப்பிரிக்கா, சுமேரியா, கிரீஸ், மெக்சிகோ முதலிய நாடுகளுக்கு இரும்புப் பொருள்கள் ஏற்றுமதி செய்து வந்தனர். எகிப்தியர்களும், கிரேக்கர்களும் இந்திய நாட்டில் இருந்துதான் இரும்பை உருக்கி பயன்படுத்தும் முறைகளை அறிந்தனர் என்று கூறப்படுகிறது. 1837ஆம் ஆண்டு இராயல் ஏஷியாட்டிக் சொசைட்டியில் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை ஒன்றில் அறிஞர் ஹீத் என்பவர் தென் இந்தியாவில் செய்யப்பட்ட எஃகுப் பொருள்களே எகிப்துக்கும், ஐரோப்பா கண்டத்திற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன என்று எடுத்துக்காட்டியுள்ளார். மெக்சிகோ நாட்டிலுள்ள பிரமிடுகளில் தமிழனின் கைவினைக் கலைகளைக் காணலாம். அண்மையில் எகிப்தில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டிலிருந்து சாத்தன், கண்ணன் என்ற இரண்டு தமிழர்கள் கடல் பயணம் செய்து எகிப்து நாடு சென்று அங்கே கொல்லன் பட்டறை ஒன்று நிறுவி, பணி செய்ததாக கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் குறிப்பிட்டுள்ளார். 

பிரமிடுகள் கட்டப் பயன்படுத்திய கற்களை செதுக்குவதற்குரிய உளிகள் இந்த கொல்லன் பட்டறையில் உருவாகி இருக்க வேண்டும். தமிழனின் இரும்பு நாகரிகத்தை வெளிப்படுத்தியது இந்த ஆதிச்ச நல்லூர்தான். அதனைத் தொடர்ந்து சகர்மேன் என்ற அறிஞர் ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டைஓடுகள் பற்றி ஒரு நூல் வெளியிட்டார். ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்து எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் திராவிடர்களின் மண்டை ஓடுகள் என்றும், ஒன்று மட்டும் ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் மண்டை ஓடு என்றும் அவர் கூறியுள்ளார். எனவே திராவிடர்களின் முன்னோர்கள் ஆஸ்திரேலிய நாட்டு பழங்குடி மக்களோடு தொடர்பு கொண்டிருந்தனர் என்று தெரியவருகிறது. அங்குள்ள பழங்குடி மக்கள் பேசும் மொழியில் தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா தென் இந்தியாவோடு இணைந்திருந்தது என்ற கருத்தை மட்டுமல்ல குமரிக் கண்ட கோட்பாட்டையும் இது உறுதி செய்கிறது என்றும் கூறலாம். ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் பயன்படுத்திய பூமராங் என்னும் ஒருவகை ஆயுதம் தமிழகத்தில் கிடைத்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. பகைவர் மீது எறிந்தால் அவர்களைத் தாக்கிவிட்டு வீசியவர்கள் கைக்கு திரும்ப வரும் ஒருவகை ஆயுதம்தான் பூமராங்.

ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி, கொழு, நெல், உமி, பழைய இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிச்ச நல்லூரில் புதைக்கப்பட்டவர்கள் தாமிரபரணி கரையில் நெல், பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்தது மட்டுமல்ல நெசவுத் தொழிலும் செய்து வந்தனர் என்று அறியமுடிகிறது. ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு செய்ததில் டாக்டர் கால்டுவெல்லுக்கும் முக்கியமான பங்கு உண்டு. தாழியில் சில அரிய பொருட்களை அவரே கண்டெடுத்து அவற்றைப் பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளார். ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் நாகரிகம் மிக்கவர்கள் என்ற கருத்தை டாக்டர் கால்டுவெல் வெளியிட்டார். ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் பூமியில் ஒரு பரபரப்பான நகரமே இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அங்கு வாழ்ந்த மனிதர்கள் வெள்ளி, செம்பு, தங்கத்தால் ஆன ஆபரணங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அழகிய மதிற்சுவர்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இன்றைக்கு அது யாரும் கேள்வி கேட்பாரற்ற பொட்டல்காடு. ஏனிந்த நிலைமை என்று பார்த்தோமானால். "எல்லாம் அந்த பாழாய்ப்போன அரசியல்தான்" எல்லாம் இந்த வடக்கத்தியர்களுக்கு தமிழன் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சிதான். இதுதான் இன்றைய ராமேஸ்வரம் மீனவன் முதற்கொண்டு ஈழம் வரை நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆய்வுகளை ஒப்புக் கொண்டால் உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது என்றாகிவிடுகிறது. அப்படியாயின் வெள்ளையர்களும் வடக்கத்தியர்களும் கண்டுபிடித்தவை எல்லாம் இதற்குப் பிந்தைய நாகரீகங்கள்தான் என்பதை ஒப்புக்கொண்டதாகி விடும். இதுதான் பிரச்னை. இப்போது இங்குள்ள 150 ஏக்கர் நிலத்தை மத்திய அரசின் தொல்லியல் துறை சுற்றி வளைத்து கையகப்படுத்தி வைத்திருக்கிறது. 2005 ஆம் ஆண்டு அத்துறை செய்த ஆய்வுகளின் முடிவுகளைக் கூட இன்னமும் வெளிவிடாமல் வைத்திருக்கிறது. வேறு யாரும் இங்கு ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது என்று ஓர் உத்தரவையும் போட்டிருக்கிறது. இதுதான் இன்றைய சோகம். 

இதைச் உலகறியச் செய்யவேண்டியது மத்திய அரசு, செய்ய வலியுறுத்த வேண்டியது தமிழக அரசு.

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

உணவே மருந்து !!! நீங்களே மருத்துவர் !!! பகுதி 6

பகுதி 6:-

சித்திரை திருநாளுக்காக ஊருக்கு சென்றிருந்ததால் தொடர் சற்று தாமதமாக வருகிறது.

நான் பகுதி - 4 ல் சொல்லியபடி முதலில் நாம் உண்ணும் உணவில் உள்ள கலோரிகளின் அளவை பார்த்தோம்.அடுத்து ஒத்துக்கொள்ளும் ,ஒத்துக்கொள்ளாத உணவு பற்றி பார்ப்போம்.

ஒவ்வொருவருக்கும் முன்பு சொன்னது போல் அவரவர் உடல் அமைப்பு மாறுபட்டு இருக்கும்.அதனால் ஒருவருக்கு காரம் அதிகம் பிடிக்கும் ,சிலருக்கு இனிப்பு அதிகம் பிடிக்கும்.அவ்வாறு பிடித்த உணவை நாம் சாப்பிடும் போது அது செரிமானம் ஆக வேண்டுமே ?அது மிக முக்கியம்.

எனக்கு நிலக்கடலை மிகவும் பிடிக்கும் ஆனால் அது எளிதில் எனக்கு செரிமானம் ஆகாது .அது போல சிலருக்கு இனிப்பு இரவில் சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் ஏற்படும் ,இவை அனைத்துமே உடலால் நமக்கு கொடுக்கப்படும் சமிஞ்ஞைகள்.எனவே நாமே நமக்கு ஒத்துவராத உணவுகளை தவிர்த்து அல்லது என்றாவது ஒருநாள் மட்டும் சாப்பிட்டு பழகுவது நல்லது.

ஆதலால் இதை தவிர்ப்பதன் மூலம் நாம் நம் உடலுக்கு வேலை பளுவை குறைக்கிறோம் .கீரை ,தயிர் ,வெங்காயம் (பச்சையாக) ஆகியவற்றை இரவில் எடுத்துக்கொள்ள கூடாது .இவை அனைத்தும் செரிப்பதற்கு மிக அதிகமான நேரத்தை எடுத்துக்கொள்ளும்.இரவு உணவை முடிந்த மட்டும் சீக்கிரம் எடுத்துக்கொள்வது நல்லது ,ஏனெனில் நாம் சாப்பிட்ட உடன் நமது உணவு செரிக்க சுமார் இரண்டரை மணி நேரம் ஆகும்.நாம் சாப்பிட்ட உடன் உறங்க சென்று விட்டால் ,நாம் சாப்பிட்ட உணவு அனைத்தும் கொழுப்பாக மாறி உடலில் சேரும். இரவு உணவிற்கும் ,படுக்கைக்கு செல்லுவதற்கும் குறைந்தது இரண்டு மணி நேரம் இடைவெளி கண்டிப்பாக தேவை.இதை நீங்களே ஒரு சுய பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம் .

:::சூடான இட்லி::: 
வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு அடுத்த நாள் காலை எழுந்திருக்கும் போது நீங்கள் உடல் அலுப்பு /வலி யை உணருவீர்கள். ஒரு நாள் சீக்கிரம் சாப்பிட்டு விட்டு இரண்டு மணி நேரம் கழித்து படுத்து,அடுத்த நாள் காலை பாருங்கள் !கண்டிப்பாக உடல் வலி இருக்காது .இரவு உணவு உண்ணும் காலம் தவறும்போது, பழம் ,பால் ஆகியவற்றை உண்ணுவது உகந்தது .பழங்களின் செரிமான நேரம் 45 நிமிடங்கள் மட்டுமே .

நாம் இரவு உணவாக இட்லி ,இடியாப்பம் மற்றும் வேக வைத்த உணவுகளான அரிசி உப்மா,நீர்க்கொழுக்கட்டை,பழ கலவை (Fruit Salad ) போன்றவற்றை அருந்துவது நல்லது.

அடுத்து நெகடிவ் கலோரி food .அது என்னங்க நெகடிவ் கலோரி ?
எந்த ஒரு உணவு தான் கொடுக்கும் கலோரிகளை விட ,அதிகமான கலோரிகளை எடுத்துக்கொண்டு செரிக்கிறதோ அதுதான் நெகடிவ் கலோரி உணவாகும்.
சில நெகடிவ் கலோரி உணவு வகைகள் .....
                                                             

    1.       Celery
    2.       Oranges
    3.       Strawberries
    4.       Tangerines
    5.       Grapefruit
    6.       Carrots
    7.       Apricots
    8.       Lettuce
    9.       Tomatoes
    10.   Cucumbers
    11.   Watermelon
    12.   Cauliflower
    13.   Apples
    14.   Hot Chili Peppers
    15.   Zucchini  

    தொடரும்....

  


செவ்வாய், 10 ஏப்ரல், 2012

உணவே மருந்து !!! நீங்களே மருத்துவர் !!! பகுதி 5

பகுதி 5:-

புகைப்படத்தை பார்த்தவுடன் நல்ல பசியுடன் இருப்பவர்களுக்கு ஒரு கட்டு கட்டலாம் என்று தோணும் .நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் உணவு வகைகளை நமக்கு சொல்லி தந்துள்ளார்கள் பாருங்கள்.

சரி விடயத்திற்கு வருகிறேன்.அரிசியை பொறுத்த வரை நாம் சமைத்த பின் உள்ள அளவையே அதாவது எடையை வைத்தே கணக்கிடுவது நல்லது .

அரிசியானது அதன் தரத்தின்படி கலோரிகள் மாறிவரும்.அதாவது வெள்ளை அரிசிக்கும் ,சிகப்பு அரிசிக்கும் கலோரிகள் மாறும்.

ஒரு கிராம் சமைத்த வெள்ளை அரிசியில்1 .3 கிராம் கலோரிகள் உள்ளது.நாம் 500 கிராம் எடையுள்ள சமைத்த அரிசியை உண்டால் 650 கலோரிகள் அதிலிருந்து கிடைக்கும் அதில் 45 சதவிகிதம் மாவுச்சத்து உள்ளது.  



மேலும் சமைத்த அரிசியில் அதாவது சோற்றில் ,நாம் மேலும் ஏதாவது சேர்த்தால் அதன் கலோரிகள் ஏறிக்கொண்டே போகும்.(அதாங்க கலந்த சாதம்னு சொல்லப்படும் தேங்காய் சாதம் ,தக்காளி சாதம் ....)

இதே போல் ஒவ்வொரு உணவிற்கும் அடிப்படை கலோரிகள் உண்டு அதனுடன் நாம் சேர்க்கும் பொருளுக்கு தக்க அதன் கலோரிகள் மாறும் .சில நாட்கள் நீங்கள் கணக்கிட்டு வந்தாலே தெரிந்து விடும்.

நாம் தினமும் உண்ணும் சில உணவிற்கு கலோரிகள் கீழே கொடுத்துள்ளேன் .மேலும் தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளவும் .

தேநீர் - (100 மி.லி)-75கலோரிகள்
(50 மி.லி பால் ,20 கி சர்க்கரை,தேயிலை ,தண்ணீர் )
குளம்பி - (100 மி .லி )-120 கலோரிகள்
இட்லி ஒன்றுக்கு (மீடியம் சைஸ்)-75 கலோரிகள் .
தோசை ஒன்றுக்கு(மீடியம் சைஸ்)-150 கலோரிகள்.  
(எண்ணெய் குறைவாக )
ஒரு தேக்கரண்டி ந .எண்ணெய் - 35 கலோரிகள்.
பொடி ஒரு தேக்கரண்டி-70 கலோரிகள்.
சப்பாத்தி ஒன்று(மீடியம் சைஸ்)-75 கலோரிகள் .
(புல்கா )
ரவை உப்மா 1 கப் - 300 கலோரிகள்
நெய் பொங்கல் 1 கப்-350 கலோரிகள்
தேங்காய் சட்னி 1 கரண்டி - 150 கலோரிகள்
சாம்பார் 1 கப் - 150 கலோரிகள்

இனிப்பு வகையறாக்களுக்கு கலோரிகள் மிக அதிகம் அதனால் கொஞ்சம் பார்த்து எடுத்துக்கொள்வது நல்லது.
    
இதையெல்லாம் நான் எழதுவது உங்களை பயமுறுத்த அல்ல.நாம் எடுத்துக்கொள்ளும் உணவே நம்மை நோய்க்கு தள்ளாமல் இருக்கவே ... 
இந்த வேகமான உலகில்,கண்டிப்பாக நம் உடலை நாம் பேணி பாதுகாத்து கொள்ள வேண்டும்.உடல் நன்றாக இருக்கும் வரைதான் நம்மால் உழைக்க முடியும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
என்னங்க ..நான் வெஜ் அயிட்டம் பற்றி ஒன்றும் போடலையே ?... என்று கேட்பது புரிகிறது ...

முடிந்த அளவு நான் வெஜ் எனப்படும் அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது .அது நம் உடலுக்கு கொடுக்கும் வேலை என்பது மிக அதிகம் அது மட்டும் அல்லாமல் அதிக சத்துக்களை உள்ளடக்கியது .15 நாட்களுக்கு ஒரு முறை என்பது போதுமானது.  


தொடரும்...


ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

உணவே மருந்து !!! நீங்களே மருத்துவர் !!! பகுதி 4


பகுதி 4 :-

இணையத்தை அதிகம் பயன்படுத்துபவர்கள் கூகுள் ஆண்டவர் உதவியுடன் கலோரி விவரத்தை தெரிந்து கொள்ளலாம். மற்றவர்கள் ,கொஞ்சம் கொஞ்சமாக குறித்துக்கொள்ளவும்.

பொதுவாக கலோரியை நாம் கடையில் வாங்கும் பொருட்களில் இருந்து தெரிந்து கொள்ள அதன் உறையின்மீது எழுதிருக்கும் விவரங்களை வைத்து தெரிந்து கொள்ளலாம்.உதாரணத்திற்கு நீங்கள் மேரி ரொட்டி வாங்குகிறீர்கள் என்றால் ,அதன் உறையில் Nutrition Info : என்று எழுதி 100 கிராமுக்கு 459 Kcls என்று குறித்திருக்கும். அந்த உறையில் மொத்தம் 160 கிராம் எடை என்றால்
 (1 .6 X 459 ) / No of Biscuts . 

இதைப்போலவே அடைத்து விற்கப்படும் பொருட்கள் அனைத்திற்கும் கலோரிகளை நாம் எளிதாக கண்டு பிடிக்கலாம். பொதுவாக Packed Foods உடலுக்கு நல்லதல்ல.


பொதுவாக நமது எடையை அதிகம் கூட்டுவது யார் தெரியுமா? 
நமது பரம்பரை சொத்து அரிசிதான்.
காரணம் ???
அரிசி பிடித்த உணவு மட்டுமல்ல ...நம் பழக்கமும் ஒரு காரணம்...
எப்படி???
நாம் சாப்பாடு என்று ஆரம்பித்தால் சில பேர் பொடி/துவையல் என்று ஆரம்பித்து சாம்பார் ,காரக்கொழம்பு/வத்தல் குழம்பு, ரசம் ,மோர் ,அப்பளம் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும்..அதனால் தான் மருத்துவர்கள் அரிசியை விட்டுவிட்டு ,கோதுமை ,ஒட்ஸ்,கார்ன் flakes ,என்று நாம் அதிகம் விரும்பாத/உண்ணாத பொருட்களை சாப்பிட பழக சொல்கிறார்கள். ஏனென்றால் நாம் எடுத்துக்கொள்ளும் அளவு குறையும் என்பதால் .

உண்மை என்னவெனில் அரிசியை போலே ஓட்ஸ் ,கோதுமை போன்றவற்றின் கலோரி அளவு எல்லாம் சற்றே ஒன்றுதான்.

நிறைய பேருக்கு தோன்றும் என்னடா இது ? இவன் எதை சாப்பிட சொல்லப்போகிறான் ..கலோரி பற்றியே எழுதி வருகிறான் என்று...

நாம் உணவு பழக்கத்தை ஆரம்பிக்கும் முன்பு அனைத்தையும் முழுமையாக தெரிந்து கொள்வது மிக அவசியம்.அதனால்தான் நான் கலோரியைப்பற்றி இன்னும் இரண்டு/மூன்று தொடர்கள் எழுதிவிட்டு பிறகு மாதிரி அட்டவணை ஒத்துக்கொள்ளும் ,ஒத்துக்கொள்ளாத உணவு போன்றவற்றை எழுதுகிறேன் அதுவரை கலோரி என்ற அடிப்படையை தெரிந்து கொள்வோம்..

தொடரும்...

  

வெள்ளி, 30 மார்ச், 2012

உணவே மருந்து !!! நீங்களே மருத்துவர் !!! பகுதி 3


Sweet Tea is very susceptible to diabetes

பகுதி 3 :-

ஆக நான் போன பகுதியில் சொல்லியபடி எழுதி பார்த்து வந்ததன் விளைவு ,நான் எவ்வளவு அதிகமாக சாப்பிடுகிறேன் என்று தெரியவந்தது...

முதலில் உணவு எடுத்துக்கொள்ளும் முறையை ஒழுங்குபடுத்தினேன்.வயிறு முட்ட சாப்பிடுவதை நிறுத்தினேன்.முக்கால் வயிறு நிரம்ப சாப்பிட்டால் போதுமானது.கொஞ்ச நாளைக்கு தேநீர் குடிப்பதை சற்று அதிகபடுத்தி கொண்டேன்.சற்றுபசிப்பது போல் இருந்தால் 2 மேரி ரொட்டி துண்டுகளை சாப்பிட்டு பழகினேன். சற்று பசிப்பது குறைந்தது .இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் ,நாம் பசிக்கும் போது சாப்பிடாமல் இருக்க கூடாது ,ஏதாவது ஒரு உணவை எடுத்துகொள்ள வேண்டும்.குறைவாக எடுத்துக்கொள்ளவும்.  

இயற்கையாகவே கடவுள் நமக்கு உடம்பில் நமக்கு பல அற்புதங்களை கொடுத்துள்ளார்.நீங்கள் தினமும் காலை எழுந்திருக்கும் நேரத்தை மாற்றி 2 ,3 நாள் அலாரம் வைத்து எழுந்து பழகுங்கள் ..4 வது நாள் அலாரம் இல்லாமலே எழுந்து விடுவீர்கள் .அதிப்போலதான் உணவு உண்ணுவதும்.சுமார் 15
நாட்களில் பழகி விட்டது .

இதில் முக்கியமான விடயம் என்னவென்றால்.நாம் எடுத்துக்கொள்ளும் உணவு குறைந்த கலோரி உள்ள உணவாக இருக்க வேண்டும்.சரி.. ஒவ்வொரு உணவுக்கும் கலோரி கண்டு பிடிப்பது எப்படி என்பதையும் ,எது கலோரி அதிகம் உள்ள உணவு,குறைவாக உள்ள உணவு என்பதையும் ,அதோடு "நெகடிவ் கலோரி Food ",நல்ல ,கெட்ட கொழுப்பு பற்றியும் விரிவாக பார்க்கலாம்.

பொதுவாக பழங்கள் /காய்கறிகள் இவையெல்லாம் குறைந்த கலோரி உள்ள நல்ல உணவுகள்..நீங்கள் அதில் மசாலா/எண்ணெய் சேர்க்கும் போதுதான் அதன் குணம் /தன்மை மாறி அதன் கலோரி அளவுகள் மாறுகிறது.நீங்கள் பழங்களை நறுக்கி அதில் தேன்,மிளகு பொடி சேர்த்து சாப்பிடலாம் .காய்கறிகளில் குறைந்த காரம் சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.





தொடரும்..... 

வியாழன், 29 மார்ச், 2012

உணவே மருந்து !!! நீங்களே மருத்துவர் !!!


பகுதி 2 :-

நாம் உண்ணும் உணவின் சத்துக்கள் கலோரிகளாக கணக்கிடப்படுகின்றன.
அந்த கலோரிகள்தான் நாம் செய்யும் வேலையை பொறுத்து உடலில் இருந்து எரிக்கபடுகின்றன.ஒரு சாதாரண ஆண்மகனுக்கு சுமார் 2300 கலோரிகள் வரை தினசரி தேவைப்படும்.அதுஅவர்கள் செய்கின்ற வேலை, சூழ்நிலையை ஒவ்வொருவருக்கும் வேறுபடும். இதைத்தாண்டி நாம் எடுத்துக்கொள்ளும் உணவின் கலோரிகள் நமது உடலில்சேர்ந்து நமது எடையை
கூட்டிக்கொண்டே வரும்.


கிராமங்களில் பெரியவர்கள் உணவு பரிமாறும் போது,
"வளர்கின்ற வயசு நல்லா சாப்பிடு என்பார்கள் "

ஒவ்வொருமனிதனுக்கும் தனது 30 வயது (தோரயமாக)வரைஉடல்உறுப்புகள் வளர்ச்சி அடைந்து வரும் .ஒவ்வொரு மனிதனுக்கும் அதுமாறுபடும்.அதனால் அதுவரை அதிகமாக உண்ணப்படும் உணவின் சத்துக்கள் உடல் வளர்ச்சிக்கு உதவும் .30 வயதை கடந்தவுடன் ,நமது உணவை நாம் பார்த்து /கணக்கிட்டு சாப்பிடுவது மிக அவசியம்."எல்லாம் சொல்றதுக்கு நல்லாத்தான் இருக்கு,சாத்தியமா? என்று கேட்பது புரிகிறது ".கண்டிப்பாக சாத்தியம்.

இப்போது நான் என்ன செய்தேன் என்பதை கூறுகிறேன்.

முதலில் எனது உடல் எடையை கணக்கிட்டேன்,பிறகு இடுப்பு,மார்பு,தொடை பகுதி அனைத்தையும் இன்ச் இல் கணக்கிட்டு,ஒரு "எச்செல்" fileஇல்storeசெய்தேன்.
அந்த மருத்துவர் எனக்கு சொன்னது 22 கிலோ குறைக்க வேண்டும்என்று.
ஆதலால்,முதலில் எவ்வளவு கலோரி ஒரு கிலோ என்று கண்டறிந்தேன்.

1 கிலோ = 7700 கலோரிகள் . ஆக 22 கிலோவிற்கு 1,69,400 கலோரிகளை நான் எரித்தாக வேண்டும். பெரிய்ய்ய்ய ....முயற்சிதான் .ஆகட்டும் ஒரு கை பார்த்து விடுவோம் என்று முடிவு செய்தேன் ...

அஹோபிலம்


கடந்த வருடம் எனது நண்பர்களுடம் அஹோபிலம் சென்று வந்தேன்.தெரிந்த நண்பர் ஒருவரிடம் அவரது மகிழுந்தை இரவல் பெற்று ,சென்று வந்தோம் ..மறக்க முடியாத பயணம் அது...